இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானப் படையினரின் ஹெலிகள், விமானங்களை பயன்படுத்தியோ அல்லது சிவில் விமானங்களைப் பயன்படுத்தியோ சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.அமைப்பு தாக்குதல் நடத்தவுள்ளதாக எந்த சிறப்பு எச்சரிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை.
எனினும் ஐ.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்பின் சதிகளையும் உடைத்தெறியும் விதமாக இரத்மலானை விமான நிலையத்தின் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே உள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.
இரத்மலானையில் விமானப்படையினரின் பூரண பாதுகாபபு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றினை கடத்தி அமெரிக்க தூதரகத்தை தகர்க்க ஐ.எஸ்.சர்வதேச பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அறிவுறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விமானப்படை பேச்சாளரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரத்மலானை விமான நிலையத்தில் விமானம் ஒன்றை கடத்திச் சென்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இவ்வாறான நிலைமைக்கு இடமளிக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க பாதுகாப்பு தரப்பு இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
இந்த நிலைமை காரணமாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் சிவில் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொண்டு கெட்ட போது, அவ்வாறான எந்த தகவலும் தனக்கு இதுவரைக் கிடைக்கவில்லை எனவும் தேசிய பாதுகபபு விவகாரத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உடன் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
' இந்த தகவல்களை நானும் ஊடகங்கள் ஊடாக அறிந்தேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துரைக்க முடியாது.
இது வரை எமக்கு எந்தவொரு விஷேட தாக்குதல் திட்டம் குறித்தும் எச்சரிக்கைகள் கிடைக்கப் பெறவில்லை. சாதரணமாக விமான நிலையத்துக்கு, ஐ.எஸ். என்றில்லாது எந்தவொரு சதியையும் முறியடிக்கும் விதமான 24 மணி நேர சிறப்பு பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்கும் விதமாகவே வழங்கப்பட்டுள்ளது.
எனவே தனியான ஒரு குழுவையோ பிரிவையோ இலக்கு வைத்து பாதுகாபபு நடவடிக்கை இல்லை. அனைத்து சதிகார நடவடிக்கைகளையும் முரியடிக்கும் விதமாக பாதுகபபு ஸ்திரமாக உள்ளது என்றார்.
0 Comments