Subscribe Us

header ads

நல்லாட்சியில் நீதி நியாயம் பற்றி கதைத்தால் வெளியே போக வேண்டும்..


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி உருவான அரசை எல்லோரும் நல்லாட்சியெனஅழைத்தார்கள்.இன்று இந்த ஆட்சியானது நல்லாட்சியின் ஒரு சிறிய பண்பை கூட வெளிப்படுத்தவில்லை.இதனைபல விடயங்களை கொண்டு நிறுவ முடியுமாக இருப்பினும் அண்மையில் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கதொடர்பான  விடயத்திலிருந்தும் அறிந்துகொள்ளலாம்.

அண்மைக் காலமாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தற்போதைய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதற்கு ஊழல் குற்றச் சாட்டுடையவர்களை இவ்வரசினர் கைது செய்யாமை அவரது பிரதானகாரணமாக முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பில் கோபமுற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வரசிலிருந்துகொண்டு இவ்வரசை விமர்சிக்கும் ரஞ்சன் ராமனாயக்கவை இவ்வரசிலிருந்து வெளியேறும் பாணியில் குற்றம்சுமத்தியுள்ளார்.

இங்கு அமைச்சர் ரஞ்சன் ராமனாயக்கவின் விமர்சனம் சரியானது. இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தான்வேண்டும். ஊழல் குற்றம் புரிந்தோரை இவ்வரசு கைது செய்வோம் என்ற மிகப் பெரிய கோசங்களை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தது. அது அதனை செய்யத் தவறினால் அது தொடர்பில் கேள்வி எழுப்ப வேண்டியது இவ்அரசில் அங்கம் வகிப்போரின் கடமையாகும். இன்னும் சொல்லப் போனால் இவ்வாட்சியிலிருந்து இவ்வாட்சியைவிமர்சிப்பது ஜனநாயக போக்கை எடுத்து காட்டுகிறது. இதனை ஏற்றுக்கொள்வதே நல்லாட்சியின் பண்புகளில்ஒன்றாகும்.

அவ்வாறில்லாமல் அப்படி விமர்சித்த அமைச்சர் ரஞ்சன் ராமனாயக்கவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககண்டித்திருப்பதானது  நல்லாட்சியின் பண்புகள் இவ்வரசிடம் சிறிதும் இல்லாததை எடுத்து காட்டுவதோடுஅதனை மூடி மறைப்பதானது இவர்களால் குறித்த ஊழல் குற்றம் சாட்டப்பட்டோர் விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதில் சிரமம் இருப்பதையும் எடுத்து காட்டுகிறது.சிரமம் இல்லாது போனால் அல்லது இது தொடர்பில்ஏதேனும் முயற்சிகள் இடம்பெற்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேறு வகையில் தனது பதிலை அளித்திருக்கமுடியும்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணியினரை அச்சுறுத்த இவ்வாட்சியாளர்கள் ஊழல்குற்றச் சாட்டுக்களை  பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. தன்னோடுள்ளவர்களை விசாரணை செய்யாது மாற்றுஅணியினரை அச்சுறுத்த குறித்த ஊழல் விசாரணைகளை மேற்கொள்வதுதான் இவ்வாட்சியின் நல்லாட்சியா?

சர்வாதிகார போக்கில் நடந்துகொள்ளும் நல்லாட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கும் மக்கள் விரைவில்பாடம் புகட்டுவார்கள்.

-அ அஹமட் -

Post a Comment

0 Comments