CHANGE நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு 2017.06.19ம் திகதி திங்கள் கிழமை புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் உட்பட CHANGEநிறுவனத்தின் திட்டங்களுடன் சேர்ந்து செயல்படும் அரச, அரச சார்பற்ற, சமூக, சிவில் நிறுவனகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், நலன் விரும்பிகள் மற்றும் பயனாளிகள் ஆண்களும் பெண்களுமாக கலந்து சிறப்பித்தார்கள்.
இராப்போசனத்துடன் நிறைவடைந்த இந்நிகழ்வானது புத்தளம் பிரதேசத்தில் வாழும் முவ்வின மக்களினது நல்லுறவையும் சக வாழ்வையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










0 Comments