களணி கங்கையின் கந்துவத்த பிரதேசத்தில் இடம்பெறும் அத்துமீறிய இரத்தினக்கல் அகழ்வை தடுப்பதற்காக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்படும் டிங்கி படகுகளை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர்களான டி.ஜீ. டபிள்யூ அமரசிறி, பிரதீப் தேனுவர ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments