Subscribe Us

header ads

இந்த யுகம் இந்துக்களும் பௌத்தர்களும் பேசவேண்டிய தருணம்!


இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பாரிய உறவு ஒன்று இருக்கின்றது. இது தமிழர்களும் பௌத்தர்களும் பேசவேண்டிய தருணம் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டு மாவட்டத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 150 முதியவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு மங்களராமய விகாரையில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மட்டு மாவட்டத்தில் யுத்தம், சுனாமி, மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் உங்களுடன் பணியாற்றி இருக்கின்றேன்.
தமிழர்களுக்கு எந்த உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளேன். அவற்றை செய்தும் வருகின்றேன்.
எனினும் தற்போது நாட்டின் நிலைமை நன்றாக இல்லை. நாம் ஏதாவது நல்லது செய்தால் அதை ஒரு குழுவினர் வீணடிக்கின்றனர். இதனால் உங்களை விட்டு விலகி இருக்கின்றோம்.
இலங்கையில் எத்தனை மதங்கள் இருந்தாலும் இந்து உரிமைக்கும் பௌத்த உரிமைக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதே போல் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பாரிய உறவு ஒன்று இருக்கின்றது.
இப்போது இருக்கின்ற யுகம் இந்துக்களும் பௌத்தர்களும் பேசவேண்டிய தருணம் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பில் அண்மைக் காலங்களில், நில ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறிய குடியேற்றம் போன்ற அடாவடித்தனங்களால் தமிழர்களுக்கு எதிராக அம்பிட்டிய சுமனரத்தின தேரர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments