Subscribe Us

header ads

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச்செய்தி

பாறுக் ஷிஹான்

மகிழ்ச்சிகரமான இந்த சந்தர்ப்பத்திலே தங்களோடு ஒருவனாக ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த தேசத்தில் இன்றைய திகதியில் எமது எதிர்பார்ப்புகள் எல்லாம் எமது தேசத்தில் கௌரவமான பிரஜைகளாக இந்த தேசத்தின் நலன்களை முதன்மைப்படுத்துகின்ற சமூகமாக உண்மை நேர்மை மனிதநேயம் நீதி மேலோங்க உழைக்கின்ற சமூகமாக அமைதி சமாதானம் சகவாழ்வு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி காணுகின்ற தேசத்தின் பங்காளிகளாக வாழ்வதேயாகும். இதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.இதுவரைகாலமும் எமது சமூகத்தின் வரலாறு மிகச்சிறப்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றது; என்றாலும் அண்மைக்காலமாக அதன் தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்த விசமமான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் துள்ளியமாக அறிந்துகொள்தல் வேண்டும் 

முப்பது நாட்கள் நோன்பிருந்து தொழுகை ஸக்காத் திக்ரு ஸலவாத் மற்றும் குர்ஆன் போன்ற நல்லமல்கள் புரிந்து 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப்பெருநாள் கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நெஞ்சங்கள்  தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் சம உரிமையுடனும் சகவாழ்வுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய  பிரார்த்திக்கிறேன்.

இதுவரைகாலமும் எமது சமூக  வரலாறு மிகச்சிறப்பான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றது. என்றாலும் அண்மைக்காலமாக அதன் தோற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்த விசமமான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் துள்ளியமாக அறிந்துகொள்தல் வேண்டும். நிலைதடுமாறி எமது இயல்புகளை மீறி மார்க்க  வழிகாட்டல்களை புறந்தள்ளிவிட்டு  வேறுபட்ட  வழியில் நாம் பயணிப்பது பொறுத்தமற்றது.

 எனவே நிதானமான போக்கில் இஸ்லாமிய  மார்க்க  இயல்புகளோடு எமது மக்களின் அபிலாஷைகளோடு இணைந்த ஒரு வழிமுறை குறித்து நாம் சிந்திக்க வேண்டும் 

மக்களுக்கு விசுவாசமான ஆட்சிமுறைமை சட்டரீதியான நடைமுறைகள் ஊழல்கள் இல்லாத நிர்வாக முறைமை வெளிப்படைத்தன்மையோடு நேர்மையோடு மனிதாபிமானத்தோடு கூடிய அரசியல் செயற்பாடுகள் எமது தெரிவுகளாக இருக்கின்றன இவற்றை நாம் வலியுறுத்தவேண்டும் இத்தகைய வழிமுறைகளை நாம் எமது வழிமுறைகளாக மாற்றியமைக்கவேண்டும். அப்போது இந்த நாட்டில் நிரந்தரமான அமைதி நிலவும்.எல்லோரது நன்மைகளையும் உறுதிசெய்கின்ற சமூகமாக எம்மால் வாழ முடியும்.

இத்தகைய நல்ல சிந்தனைகளைச் சுமந்தவர்களாக இந்த ஈகைத் திருநாளை நாம் எல்லோரும் நோக்குவோம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மனிதாபிமான அவஸ்த்தைகளை எதிர்கொண்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் அவர்களது விடுதலைக்காகவும் நாம் பிரார்த்திப்பதுடன் தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியை ஸ்திரப்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படவும் தமிழ் – முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சமத்துவமாக வாழ்வதற்குமான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்'

Post a Comment

0 Comments