Subscribe Us

header ads

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் குறித்து சட்டத்தை உடன் அமுல் செய்யவும் - சவுதி இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு


(எம்.எப்.எம்.பஸீர்)

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலங்­கையின் முன்­னெ­டுக்­கப்­பட்ட வெறுக்­கத்­தக்க நட­வ­டிக்­கைகள், பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் குறித்து இலங்கை அர­சாங்கம் உட­ன­டி­யாக சட்­டத்தை அமுல் செய்து சந்­தேக நபர்­களை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இஸ்­லா­மிய கூட்­டு­ற­வுக்­கான அமைப்பு  தெரி­வித்­துள்­ளது.
சவூ­தியின் ஜித்­தாவை மைய­மாக கொண்டு செயற்­படும் 57 முஸ்லிம் நாடு­களின் கூட்­டு­றவில் இயங்­கி­வரும் குறித்த ஸ்தாப­னத்தின் பொதுச் செய­லாளர் கலா­நிதி யூசுப் அல் ஒதைமீன் இதனை அறி­வித்­துள்ளார்.

அத்­துடன் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு  முழு­மை­யான ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் தமது அமைப்பு தொடர்ந்தும் வழங்­கு­மெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  


இஸ்­லா­மிய கூட்­டு­றவு அமைப்பின் சார்பில்  அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்டே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

குறித்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மக்கள் மத்­தியில் அச்ச உணர்­வையும் அவ­நம்­பிக்­கை­யி­னையும் உரு­வாக்கும் தீவி­ரப்­போக்குக் கொண்­ட­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் வெளிப்­ப­டை­யான வன்­முறை நிலை­மைக்கு எதி­ராக இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு முழு­மை­யான ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும்  இஸ்­லா­மிய கூட்­டு­ற­வுக்­கான அமைப்பு வழங்கும். வீடுகள், வர்த்­தக நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­யல்கள் மீதான தாக்­கு­தல்கள் மிகுந்த கரி­ச­னைக்­கு­ரி­ய­னவும் ஆழ்ந்த கவ­லைக்­கு­ரி­ய­ன­வு­மாகும்.


சமூ­கங்­க­ளுக்­கி­டையே அமை­திக்கும் சமா­தா­ன­பூர்­வ­மான உற­வுக்கும் வேண்­டுகேள் விடுத்­தி­ருக்கும் அதே­வேளை, சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும்  சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறும்  அவற்­றுக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்­தின்முன் நிறுத்­து­மாறும் அதி­கா­ரி­களின் கவ­னத்­துக்கு கொண்டு வரு­கின்றோம்.


இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் சமூகம் இலங்­கையில் நீண்­ட­கால இருப்பைக் கொண்­டுள்­ள­தோடு,  ஏனை­யோ­ருடன் சமா­தா­ன­மா­கவும் இணக்­கப்­பாட்­டு­டனும் வாழும் பாரம்­ப­ரி­யத்­தையும் கொண்­டுள்­ளது அத்­துடன் ஒட்­டு­மொத்­த­மாக நாட்டின் கலாச்­சாரம் மற்றும் பொருளாதாரத்திற்கும் முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்து வருகின்றது . எனவே இத்தகைய சம்பவங்கள் உடன் நிறுத்தப்பட்டு சட்டத்தின் மீதான ஆட்சிப் படுத்தல் உறுதி செய்யப்படல் வேண்டும். என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments