புத்தளம் அல்காசிமி சிட்டியில் இங்கிவரும் முல்லை ஸ்கீம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பினர் புனித ரமழான் மாதத்தில் ஏற்பாடு செய்த இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர், முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி யு.எம்.அப்துல் வதூத் உட்பட உலமாக்கள், முல்லை ஸ்கீம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
-Raseen Rasmin-






0 Comments