திருமணத்துக்கான சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பதை இவர்களின் சமூகம் மதிக்காத காரணத்தால், இவர்களுக்கு அந்தச் சட்டத்தில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதில்லை.
பன்னிரெண்டு வயதான சிறுமிகள் கூட கட்டாய திருமணத்துக்கு உள்ளாகும் காரணத்தால், இந்த நிலைமைக்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்று முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வேதனை மிக்க அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு சிறுமியிடம் பிபிசி பேசியது. அவரது அடையாளம் மறைக்கப்படுகின்றது.
சிலருக்கு அவரது இந்த கதை சங்கடத்தை தரக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.
0 Comments