கடந்த 22.06.2017 வியாழக்கிழமை கல்பிட்டி பெறிய பள்ளிக்கு பின்னால் வசித்து வந்த நெளபல் நானாவின் வீடு தீக்கரையனது இதன் காரணமாக உடுத்திருந்த உடைகளை தவிர அனைத்து உடைமைகளும் எரிந்து சாம்பலானது நிர்க்கதியான இவ் ஏழை குடும்பத்துக்கு உடனடியாக உதவிகரம் நீட்டினர் ஊர் மக்கள் ஆரம்பகட்டமாக வீட்டுக்கான அத்திவாரம் போடுவதென முடிவு செய்தனர் அதன் பின்னர் படிப்படியாக உதவிகள் வந்து சேர்ந்தன .சிலர் முகநூல் மூலமாகவும் உதவி கோரினர்.
பலர் நேரடியாகவும் உதவி புரிந்தனர் வெளிநாடுகளில் வசிக்கும் கல்பிட்டியை சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும் வழங்கினர் இவ்வாரன உதவிகள் மூலம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வீட்டுக்கு உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட ஊரார் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே .இப்பதிவு பெருமைக்காக போடப்படும் பதிவு இல்லை என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது இவ்வாரான நிர்க்கதிக்குள்ளான மக்களுக்கு உதவி புரிவதற்கான ஊர் ஒற்றுமையின் எடுத்துக்காட்டுவதற்காகவே யார் சொன்னது கல்பிடான் ஒற்றுமை இல்லாதவன் என்று ஊர் என்று வரும் போது ஒற்றுமை பட வேண்டிய சந்தர்பத்தில் ஒன்று படுவான் சாதித்துகாட்டுவார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
0 Comments