இன்றைய நூற்றாண்டில்
அதிகம் பேசப்படுகின்ற பேசு பொருளாக சுத்தமான குடிநீருக்கான கேள்வி விளங்குகின்றது.
சுத்தமான குடிநீர் என்பது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. 21ம் நூற்றாண்டில் நீரின் தரமும்,முகாமைத்துவமும் சார்ந்த பிரச்சினையே மிக முக்கியம்
பெற்றுள்ளதை காணலாம் . இன்று சுத்தமான குடிநீருக்கான பாரிய கேள்வியை உலக நாடுகள் எதிர்
நோக்கி வருகின்றன. உலகளாவிய ரீதியில் சுத்தமான குடிநீரை பெறுதல் என்பது பாரிய சவால்
மிக்க ஒரு விடயமாக மாறியுள்ளது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல இலங்கை நீர் வளங்
கொண்ட நாடாக காணப்பட்ட போதிலும் நீர். வறுமையை எதிர்நோக்கும் பிரதேசங்கள் இங்கு அதிகம்
காணப்படுகின்றன .
சுத்தமான நீருக்கான
வரைவிலக்கணத்தை நோக்குவோமாயின் 'வாழ்வில் எந்தவொரு
கட்டத்திலும் நுகரும்போது ஆரோக்கியத்திற்கு எந்த வித த்திலும் கேடு விளைவிக்காத அபாயகரமானதாக அமையாத
குடிநீர் சுத்தமான குடிநீர் ' எனப்படுகிறது
. மேலும் '' தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும்
இரசாயனப் பொருட்களால் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத நீர் அதாவது நீரின் சுவை,நிறம்,மணம் மாறாத தன்மையினை கொண்ட நீரை சுத்தமான நீர் '' எனலாம்
மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணத்திற்கு
உட்படாதவை மாசாகிய நீர் எனலாம். நீர் மாசாக்கத்தின் மூலமே நீர் வறுமை நிலவுகிறது. அதாவது
நீர் மாசாக்கம் எனும் போது பௌதீக,இரசாயன,உயிரியல் ரீதியில் நீர் அதன் இயற்கை தன்மையை இழத்தல்
நீர் மாசாக்கம் எனப்படும். இந்நீர் மாசடைதலை பல மூலகங்கள் ஏற்படுத்துகிறது மேற்பரப்பு
நீரிலும் தரைக்கீழ் நீரிலும் சல்பேட்,சோடியம்,குளோரைட் ,நைத்தரேற்,பொஸ்பேற்,மற்றும் கல்சியம் அயன்கள் என்பன நீரினை இரசாயன மாசாக்கத்திற்கு
உட்படுத்துகின்றது. நீர் மாசாக்கமானது முதலில் ஹிபோக்ரடிஸினாவில் தான் ஏற்பட்டது பின்பு
கைத்தொழில் மயமாக்கம் , சனத்தொகை வளர்ச்சி
காரணமாக உலகெங்கும் பரவி இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது
இதற்கு புத்தள மாவட்டமும் விதிவிலக்கல்ல .
நீர் மாசடைதலானது
இரு வகைகளில் இடம்பெறுகின்றது
1 நுண்ணங்கிகள் மூலம்
2 இரசாயன பொருட்கள்
மூலம் - இது இயற்கையாகவோ அல்லது மனித செயற்பாடுகள் மூலமோ இடம் பெறலாம் இரசாயனப் பொருட்கள் எனும் போது fluoride
,Arsenic,Nitrate Salts,Lench,Metals,Toxins போன்றன உள்ளடங்குகின்றன உலக சுகாதார தாபண கருத்துப்படி குடிநீரில் 750 மாசாக்கிகள் காணப்படுகின்றன இதன் மூலம் ஏராளமான
சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகின்றன அவை பல்லில்
கறைபடிதல் , எண்பு முறிவு,
சிறுநீரக நோய், வயிற்றில் கல், தோல் நோய்கள் , வாந்தி , கொலரா போன்றனவாகும்
நீர் வறுமையானது இன்று
பல்வேறு கோணங்களில் நோக்கப்படுகிறது அவை
1 பௌதீக ரீதியான நீர்
வறுமை இது முழு நீர் வறுமையை
குறிப்பிடுகின்றது.
2 பொருளாதார நீர் வறுமை இது நீர் சந்தை பொருளாக
மாறுவதை குறிக்கின்றது அதாவது நீரை பணங் கொடுத்து
வாங்குவதை குறிக்கின்றது
3 நிர்வாக ரீதியான
வறுமை நீர் வழங்களை முறையாக
நிர்வாகம் செய்யாமையை இது குறிப்பிடுகின்றது.
4 அரசியல் ரீதியான
நீர் வறுமை அரசியல் தலையீடுகளால்
போதிய நீரை பெற முடியாமையை இது குறிக்கின்றது.
இவ்வாறாக நீர் வறுமையை
பிரித்து நோக்கலாம்
மனிதனது ஆரோக்கிய
வாழ்வில் அத்தியவசிய மூலக்கூறு சுத்தமான குடிநீராகும் உலகில் 33% ஆனவர்கள் நீர் வறுமைக்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றனர்
இது 2025 ஆகும் போது 60% ஆக அதிகரிக்கும் என UNDP குறிப்பிடுகின்றது .உலகில் இன்று மூவரில் ஒருவருக்கு
சுத்தமான குடிநீர் காணப்படுவதில்லை.சுத்மான நீர் இன்மையால் 8செக்கனுக்கு ஒரு குழந்தை இறக்கின்றது.
இலங்கையில் 2/3 நீர் வறுமை காணப்படுகின்றது. அத்தோடு 2008 தேசிய சனத்தொகை மதிப்பீட்டின் படி 34% மக்களுக்கு மட்டுமே குழாய் நீர் விநியோகிக்கப்படுகின்றது
ஏனையவர்கள் கிணற்று ,குளத்து ,ஆற்று, மற்றும் மாசடைந்த நீரையே பருகுகின்றனர்.
இலங்கையில் 25 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் உள்ள 33% மக்கள்
நீர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு புத்தள மாவட்டமும்
விதிவிலக்கல்ல நீர் வறுமை அதிகரித்த போக்கை இங்கு காணக் கூடியதாகவுள்ளது இங்கு நீர்
மாசடைவுக்கு பிரதான காரணமாக இப்பிரதேசத்தில்
நிலத்திற்கு கீழ் காணப்படுகின்ற சுண்ணாம்பு கற்பாறைகளும் அத்தோடு அதிகரித்த தும்புத்
தொழிற்சாலைகளுமே காரணமாகும். இவற்றின் மூலம் இப்பிரதேச தரைக்கீழ் நீர் மாசடைந்துள்ளதோடு
இப்பிரதேச நீர் வறுமைக்கு பிரதான காரணமாக திகழ்கின்றது . இதன் மூலம் பல்வேறு சுகாதார
சவால்களை இப்பிரதேச மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர்.
மேலும் அதிகரித்த சிறுநீரக நோயாளர்கள் புத்தள மாவட்ட கற்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியுள்ளனர்.
1984 இல் இருந்து சிறு நீரக நோயாளர்களின்
அதிகரித்த போக்கை இப் பிரதேசத்தில் அவதானிக்க முடிகின்றது அத்தோடு பற்களில் கறைபடிதல்
போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங் கொடுத்து வருகின்றனர். குடிநீர் தொடர்பான நோய்கள்
காணப்படுகின்ற மாவட்டங்களில் 2 ஆவது இடத்தில் புத்தளம்
மாவட்டம் காணப்படுகின்றது
இங்கு குடிநீர் வறுமை
காரணமாக மக்கள் தமது அன்றாட குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய போத்தலில் அடைக்கப்பட்ட
நீரையே கொள்வனவு செய்கின்றனர் . இதற்காக ஒரு நாளைக்கு 150-450 ரூபாக்களை செலவு செய்கின்றனர் .
புத்தள மாவட்டத்திலும்
அதிகமாக கற்பிட்டி பிரதேச கிராமங்களே இந் நீர் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இப்பிரதேச
மக்கள் தினமும் தமது அன்றாட வாழ்வில் சமூக , பொருளாதார , சுகாதார சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் .
இப்பிரதேசத்தில் மாசடைந்த
நீரை சுத்திகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்துவதன் மூலமும் , குழாய் நீர் விநியோக முறைகளை இப்பிரதேசத்தில் ஏற்படுத்துவதன்
மூலமும் நீர் வறுமையை முற்றாக குறைக்கலாம் .
இப்பிரதேசத்தில் நீர் வறுமையை குறைக்க 'மெகா ஆரோ' என்ற நீர் தங்கிகள் கட்டி நீர் விநியோகிக்கும் திட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச பாராளுமன்ற உருப்பினர்கள் குறிப்பிட்ட போதும் அவை எந்தளவிற்கு
சாத்தியமாகும் என்பது ஐயத்திற்குரியது எனவே அரசு சிறந்த நீர் வழங்கல் முகாமைத்துவ நுட்பத்தை
பயன்படுத்தி நீர் வழங்களை மேற்கொள்வதின் மூலம் இப்பிரதேச நீர் வறுமையுடன் தொடர்பான
சமூக, பொருளாதார, சுகாதார பிரச்சினைகளை இல்லாதொழித்து ஆரோக்கியம்
மிக்க சமூகத்தை கட்டியெழுப்பலாம்.
Written by
Sahana Salman
BA Special in sociology
0 Comments