தவறான மார்க்க நிலைப்பாட்டிலிருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி தவ்பா செய்து மீளுகிறேன்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்ட 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலும், அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இந்த ஜமாஅத்தில் அங்கத்தவனாய் இருந்து வருகிறேன்.
பிற அமைப்புகளுடன் ஒப்பிடுகையில் வஹீ மட்டும் தான் மார்க்கம் என்ற தூய கொள்கையை எடுத்துரைப்பதிலும், அதனை சமரசம் இன்றி நடைமுறைப் படுத்துவதிலும் இந்த ஜமாஅத் காட்டிய முனைப்புத்தான் என்னை இன்னும் இன்னும் இந்த அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் களப்பணியாற்ற வைத்தது.
ஆனால், ஜமாஅத் கடைப்பிடித்து வருகின்ற " சூனியத்திற்கு தாக்கம் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ் இதற்கு நாட மாட்டான்" என்கிற நிலைப்பாட்டையும், "நம்பகமான அறிவிப்பாளர்கள் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்பட்டால் மறுக்கப்பட வேண்டும்" என்ற நிலைப்பாட்டையும் என் சக்திக்கு உட்பட்டு இயக்க பற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு நான் மீளாய்வு செய்ததில் ஜமாஅத்தின் நிலைப்பாடு தவறானதும் சத்தியத்திற்கு வெகு தூரமானதும் ஆகும் என்ற முடிவுக்கே என்னால் வரமுடிந்துள்ளது.
ஜமாஅத்தில் இருக்கும் எந்த அங்கத்தவருடனோ, நிர்வாகியுடனோ, தாயிக்களுடனோ எள்ளின் முனையளவு கூட எனக்கு தனிப்பட்ட மனக்கசப்புகள் இல்லை என்பதை அல்லாஹ்வை சாட்சியாக வைத்து குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
இத்தனை வருடங்களாய் எனது இன்ப துன்பங்களில் உறவுகளைவிட நெருக்கமாய் இருந்து எனக்கு உதவிய ஜமாஅத்தின் அங்கம் வகிக்கும் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, மீண்டும் சத்தியப் பாதையில் எம்மை இணைப்பதற்கு இரு கரம் ஏந்துகின்றேன்.
எனது விலகளை வைத்து குர்ஆன் ஸுன்னாவுக்கு வெளியே உள்ளவர்கள் குளிர்காயவோ, ஒருவரையொருவர் பரிகசிக்கும் கேளியாக ஆக்கவோ வேண்டாம் என வினயமாய் வேண்டுகிறேன்.
அழகிய அழைப்பாளர்கள் கருத்துக்களோடே உரையாடுவார்கள், விவாதிப்பார்கள்.
நான் கருத்து ரீதியாக தவறுகண்ட விடயங்கள் இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் பொது மக்களுக்கு என்னால் முடிந்த வரை விளக்கம் அளிக்கப்படும்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை தந்தருள்வதோடு, அதில் நிலைத்திருக்கவும் செய்வானாக!
இப்படிக்கு,
M.T.M. பர்ஸான்
(சிலாபம்)
Mohamed thaha farzan
0 Comments