அரசியல்வாதிகள் செய்வது சமூக சேவையாக இருக்கலாம் , ஆனால் சமூக சேவைகள் அனைத்தும் அரசியல் ஆகாது.
அரசியலில் நுழைய விரும்பாத , அல்லது ஆர்வமில்லாத அதே நேரம் சமூக பணிகளில் ஆர்வமுள்ள பலர் இவ்வாறான செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் செய்து கொண்டே உள்ளனர். (இவர்களுக்கு உதவும் அரசியல்வாதிகளும் உள்ளார்கள் )
நமது ஊருக்குள்ளும் இவ்வாறான பலர் இருக்கிறார்கள் அது தாண்டி கடல் தாண்டி சென்றாலும் ஊரை பற்றி சிந்தித்து ஒன்றுப்பட்டும் செயற்படுகிறார்கள்.
( புத்தளத்தை சேர்ந்த PAQ, YSF/ இன்னும் கல்பிட்டியை சார்ந்த அமைப்புக்கள் , மதுரங்குளி பிராந்தியத்துக்குள் சில கிராமத்தை சேர்ந்த அமைப்புக்கள் )
இப்படி ஊரில் இருந்தாலும் சரி ,ஊருக்கு அப்பால் இருந்து ஊருக்காக செயற்பட்டாலும் சரி இவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்த முடியவில்லையாயின் ஒதுங்கி அமைதியாக இருக்க வேண்டும் - இது நாகரிக செயல் மட்டுமல்லாது சமூகத்திற்கு செய்யும் அளப்பரிய நன்மையும் கூட.
ஆனால் நமது சுயநல ஆசைகளை மனதில் வைத்துக்கொண்டு இப்படியான நிறுவனங்களுக்குள் ஊடுறுவி இவர்களை அழித்துவிட்டு, நாம் இது போன்ற அமைப்பொன்றை நிறுவ வேண்டும் என்று நினைத்து செயற்படுவோமாக இருந்தால் அது கீழ்த்தரமானது.
மாறாக இப்படி செயல்படுவோரை அப்படியே விட்டு விட்டு நாம் ஒரு அமைப்பை ஆரம்பித்து அவர்களை விட சிறப்பாக செயற்படுவோம் எனில் அது வரவேற்க வேண்டிய விடயம் மட்டுமன்றி சமூகத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் விடயமும் ஆகும்.
இப்படியான அமைப்புக்களை கட்டமைத்து வழி நடத்துவோர் சில குள்ளநரியர்கள் விடயத்திலும் , நய வஞ்சகர்கள் விடயத்திலும் அவதானமாக செயல்பட வேண்டும் என்பதே நமது சிறிய ஆலோசனை.
-Mohamed Infaas-
0 Comments