கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த திட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு அதற்கு பொறுப்பாக இருந்த அதிகாரி மாற்றப்பட்டமையே மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவுக்கு காரணமாகியுள்ளதென கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவரினால், குப்பை கொட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட வேறு திட்டத்தினால் ஏற்பட்ட பிரிவில், மீதொட்டமுல்லவுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரி நீக்கப்பட்டார்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் உள்ள குப்பையை ரயில் மூலம் புத்தளத்திற்கு மாற்றுவதற்கு கடந்த ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இதற்காக நிதியுதவியை உலக வங்கி வழங்கியிருந்தது.
2014ஆம் ஆண்டும் இந்த திட்டத்திற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்ததுடன் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்ததாக கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments