வில்பத்து சரணாலய வனப்பிரதேசத்திற்கு வடக்கே முஸ்லிம்களுக்கு சொந்தமான வெப்பல், கரடிக்குளி, மரிச்சிக்கட்டி ஆகிய பிரதேசங்களையும் தேசிய வனப்பிரதேசங்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ரஷ்யாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.
முதுகெலும்புள்ள ஒரு முஸ்லிம் தலைவன் தானும் இலங்கையில் இல்லை என்பதனை ரஷ்யாவில் இருந்தே உலகிற்கு பறைசாற்றுவது போல் அந்த பிரகடனம் இருக்கிறது.
வடக்கில் ஏற்கனவே தமிழர்களிடம் காணிகளை பறிகொடுத்துள்ள முஸ்லிம்கள் தற்பொழுது இராணுவத்திடம் தமது பூர்வீக இடங்களை பறிகொடுத்துள்ளனர்.
கிழக்கில் கருமலையூற்று, அரிசிமலை, புல்மோட்டை முதல் தீகவாப்பிய பொத்துவில் வரை அபகரிக்கப் பட்டுள்ள முஸ்லிம் காணிகளுக்கும் இதே நிலைமைதான் நடக்கப் போகிறது.
நானா நீயா என முஸ்லிம்களது தலைவர்களாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் எந்தவொரு அமைச்சருக்கும் முஸ்லிம்களது உரிமைகளை போராடி வென்றெடுக்கும் யோக்கியதை கிடையாது என்பதே உண்மை.
வடகிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி மக்கள் தமது உரிமைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்க வேண்டும்.
எமது போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மொத்தமாகவும் சில்லறையாகவும் விலைபேசிய கையாளாகா தலைமைகள் இன்று சரணாகதி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
சமூகம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கையறு நிலையில் அரசியல் அனாதையாக மாறி இருக்கிறது.
-Inamullah Masihudeen-
0 Comments