Subscribe Us

header ads

காலநிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை... மக்களே அவதானம்!

திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் காலி ஊடாக கொழும்பு வரையிலும் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடற்பகுதியில் காணப்படும் மேகக் கூட்டங்களினால் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதோடு குளாரான காலநிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்,
அம்பாறை - மிதமான காலநிலை
அனுராதபுரம் - மழையுடனான காலநிலை
பதுளை - மழையுடனான காலநிலை
மட்டக்களப்பு - தூறல் மழையுடனான காலநிலை
கொழும்பு - மழையுடனான காலநிலை
காலி - மிதமான காலநிலை
கம்பஹா - மழையுடனான காலநிலை
அம்பாந்தோட்டை - மிதமான காலநிலை
யாழ்ப்பாணம் - மிதமான காலநிலை
களுத்துறை - மழையுடனான காலநிலை
கண்டி - முகில் மூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை
கேகாலை - மிதமான காலநிலை
கிளிநொச்சி - மிதமான காலநிலை
குருணாகல் - மழையுடனான காலநிலை
மன்னார்- மிதமான காலநிலை
மாத்தளை - மிதமான காலநிலை
மாத்தறை - மிதமான காலநிலை
மொனராகலை - மழையுடனான காலநிலை
முல்லைத்தீவு - மிதமான காலநிலை
நுவரெலியா - மழையுடனான காலநிலை
பொலன்னறுவை - மிதமான காலநிலை
புத்தளம் - மிதமான காலநிலை
இரத்தினபுரி - முகிலுடன் கூடிய மந்தமான காலநிலை
திருகோணமலை - மிதமான காலநிலை
வவுனியா - மிதமான காலநிலை

Post a Comment

0 Comments