அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவை (YMMA) - இது 1950 ம் ஆண்டு Dr.A.M.A. அஸீஸ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமூக சேவை சார் நிறுவனமாகும் .
இலங்கை நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்த அமைப்பு கல்வி , வாழ்வாதாரம் , விளையாட்டு , இளைஞர் வலுவூட்டல், உலர் உணவு விநியோகம்,சுகாதாரம் என்று பலதரப்பட்ட அம்சங்களை சுமந்து பயணிக்கிறது .
இது முத்திரை பதித்த இடங்களில் நமது புத்தளம் மாவட்டமும் ஒன்று .
இதன் புத்தளம் மாவட்ட பணிப்பாளராக M.T.M.நபீல் அவர்கள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அமைதியாக இடம்பெறும் இந்த அமைப்பின் சேவைகளை விரிவாக்கம் செய்யவும் , வேகமாக இயங்கும் நோக்கிலும் புதிய நிர்வாகிகள் இன்று தெரிவு செய்யப்பட்டார்கள் .
2017 ஆம் ஆண்டுக்கான சகல விடயங்களையும் இவர்களே கையாளுவார்கள் .
>பணிப்பாளர் -M.N.M.நபீல்
>தலைவர் - அல்ஹாஜ் S.R.M.முஹ்ஸி,
> உப தலைவர்- S.L.அன்வர்,
>செயலாளர்- M.முஜாஹித் நிஸார்,
>உப செயலாளர்- M.A.M.அஸாருதீன்,
>பொருளாளர்- A.L.M.அஸாரூக்
>கல்வி விவகாரம் - M.H.இதாப்,
>சுகாதார மேம்பாடு - S.R.M. முபாஸ்,
>இளைஞர் மேம்பாடு -M.I.M.இன்பாஸ்,
>ஊடக பொறுப்பு -S.A.M.ஹஸன்,
> விளையாட்டு பிரிவு - R.M.பஸ்லின்,
>உறுப்பினர்களாக-
M.I.M.சமீர்,
M.I.M. அல்பர்,
S.M.இபாம்.
ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இதன் கிளைகள் புத்தளம் மாவட்டம் முழுக்க அமைக்கப்பட்டு பல்வேறுபட்ட மக்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டும் எனும் திட்டம் இன்று எடுக்கப்பட்டது .


0 Comments