Subscribe Us

header ads

சுவையான சப்பாத்தி பீட்சா செய்வது எப்படி


மீதமான சப்பாத்தியை நீங்கள் சப்பாத்தி பிட்சா செய்து கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும். அதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

குடமிளகாய் - 1 பெரியது
துருவிய சீஸ் - 1/4 கப்
சப்பாத்தி - 5

சாஸ் செய்வதற்கு…

எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 12 டீஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 (பெரியது)
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன் 
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், குடமிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொதிக்கும் நீரில் தக்காளியைப் போட்டு, தக்காளியில் உள்ள தோல் வெளிவரும் வரை வேக வைத்து இறக்கி, ஆறியதும் தோலை உரித்துக் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தக்காளி சாஸ், மிளகுத் தூள் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து சாஸ் போன்று நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் குடமிளகாயை போட்டு, சிறிது நேரம் வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.

* இறுதியில் ஒவ்வொரு சப்பாத்திகளாக எடுத்து, அதன் மேல் செய்து வைத்துள்ள சாஸை தடவி, மேலே வதக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் சீஸ் தூவி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில், 5 நிமிடம் மூடி வைத்து இறக்க வேண்டும்.

* இதேப்போல் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்தால், சுவையான சப்பாத்தி பிட்சா ரெடி!!!

குறிப்பு :

இந்த பிட்சாவில் உங்களுக்கு விருப்பமான அனைத்து கார்ன் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments