Subscribe Us

header ads

கால்பந்தாட்ட வீரர் மெஸிக்கு சிறைத்தண்டனை

ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் வீரர் லைனல் மெஸிக்கு வரி மோசடி வழக்கு தொடர்பில் 21 மாத சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


லைனல் மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகிய இருவருக்கு எதிராகவும் குறித்த வரி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.
கடந்த 2007 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் பெலிஸி மற்றும் உருகுவேயில் போலியான நிறுவனங்களைக் கொண்டு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமத்தினை வழங்கியதில்  வரி மோசடி செய்ததாக  மெஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மெஸி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்பட்ட நிலையில், வரி மோசடி வழக்கில் மெஸி மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு 21 மாத சிறைத்தண்டனையும், சுமார் 32 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Post a Comment

0 Comments