எமது தாய் நாட்டின் உடன் பிறப்புக்கள் கடந்த ஒரு வாரகால அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது வரை சுமார் 38 பேரளவில் மரணமடைந்துள்ளதுடன் 300,000 க்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை விட்டும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் இருப்போரை மீட்கும் பணிகள், தற்காலிக முகாம்களில் வசிப்போருக்கான அத்தியாவசிய உதவிகளில் பலர் இரவு பகல் பாராது முயற்சித்து வருகின்றனர்.
கத்தாரில் இயங்கி வருகின்ற இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் சம்மேளனத்தின் (FSMA - Qatar) வழிகாட்டலில் கத்தாரில் இயங்கி வருகின்ற அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைத்து கூட்டாக எமது பங்களிப்புகளை வழங்கும் நோக்கில் விசேட செயற்குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதனை தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உடன் பிறப்புகளுக்காக தினமும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவதோடு, கட்டாரில் இயங்கி வருகின்ற அமைப்புக்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து முழுமையான பங்களிப்புகளை பெரிதும் எதிபார்கின்றோம்
தயவு செய்து பின்வரும் சகோதரர்களைத் தொடர்பு கொண்டு உங்களின் முடியுமான பங்களிப்புகளை உடனடியாக வழங்குமாறு அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்
சகோ. முஹம்மத் லாபிர் - 6665 4344
சகோ. ஷஹாத் நாசிர் - 5547 1723
சகோ. முஹம்மத் அக்ரம் - 5598 3589
சகோ. அசீம் - 5598 9514
சகோ. மனார் மன்சூர் - 5574 7512
ஜசாகுமுல்லாஹு கைர்
Rislan Farook
General secretary - Federation of Sri Lankan Muslim Associations Qatar (FSMA)
0 Comments