Subscribe Us

header ads

பிக்கு ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் - அலவத்துகொட பிரதேசத்தில் சம்பவம்


அலவத்துகொட பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவருக்கு மூன்றரை அடி நீளம் கொண்ட காதல் கடிதம் எழுதிய மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த மாணவியையும், அவரது பெற்றோரையும் விகாரைக்கு அழைத்த குறித்த பிக்கு, மாணவியை பிரம்பால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவி அக்குரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதல் மேற்கொண்ட பிக்குவை அலவத்துகொட பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments