அசாம் மாநிலம் பிஸ்வந்த் சரிலி மாவட்டம் பாரஜுலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா புமிஜ். இவர் மீது 2 வழக்குகள் உள்ளன. இவரை கடந்த ஏப்ரல் 4-தேதி முதல் காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த் நிலையில் எரிந்த நிலையில் ஒரு உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 4 ந்தேதி கிருஷ்ணா கிராமத்தில் உள்ள ரிதா ஓராங் என்ற பழங்குடியின பெண் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த ரிதா ஓராங் அங்கிருந்த கோடாரியை எடுத்து கிருஷ்ணாவை வெட்டி உள்ளார். இதில் கிருஷ்ணா கிழே விழுந்து உள்ளார். ஆத்திரம் தீராத ரிதா கிருஷ்ணாவின் உறுப்பை வெட்டி எடுத்து விட்டார். பின்னர் இது குறித்து கிராமத்தில் உள்ல பெண்களிடம் கூறி உள்ளார். பின்னர் அவரது உடலை எரித்து உள்ளார்.
தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிதா ஓராங் அவரது கணவர் ஆகியோரை கைது செய்து உள்ளனர்.
0 Comments