பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இன்று இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சுமார் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பரிஸ் தீவிரவாத தாக்குதல் வழக்கின் குற்றவாளியான சாலா அப்துஸ்ஸலாம் என்பவர் கடந்த வாரம் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் அப்துஸ்ஸலாமின் கைதுக்கு பழி வாங்க நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
குண்டுகள் வெடிப்பதற்கு முன்பாக அரபி மொழியில் உயர்ந்த பேச்சுச் சத்தமும், துப்பாக்கியால் சுடும் சத்தமும் கேட்டதாக அந்நாட்டு ஊடக நிறுவனமொன்று தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
0 Comments