Subscribe Us

header ads

பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸில் விமான நிலையத்தை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிலையத்திலும் குண்டு வெடிப்பு



பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வெடிசத்தம் கேட்டதை அடுத்து பயணிகள் அலறியடித்து கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். விமான நிலையம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது. 

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானதாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விமான நிலையத்தை அடுத்து புருசெல்ஸ் நகரில் உள்ள மாயெல்பீக் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. அங்கிருந்த அனைவரும் உயிர்பயத்தில் ஓட்டம் பிடித்தனர். முதலுதவி மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸ் தாக்குதல் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் புருசெல்ஸில் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Post a Comment

0 Comments