Subscribe Us

header ads

முதல் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

மும்பையின் முதல் சோதனைக் குழாய் குழந்தை ஹர்ஷா சவ்தா-ஷா ஆண் குழந்தையை திங்களன்று பிரசவித்தார். ஹர்ஷா பெற்றோர்ருக்கு உதவிய அதே டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். 1986-ல் செயற்கை கருத்தரித்தல் நுட்பங்களை பயன்படுத்தி ஹர்ஷாவின் பெற்றோர் குழந்தை பெற்றனர்.
இது குறித்து ஹர்ஷா மற்றும் அவரது கணவர் திவ்யபால் ஷா கூறுகையில், சிவராத்திரி நல்ல நாளில் குழந்தை பிறந்துள்ளது கடவுள் தந்த பரிசு என்று கூறினர். நான் கடவுளின் பரிசு, என் குழந்தையும் சிறப்பானது என்று நம்புகிறோம் என்று ஹர்ஷா கூறினார்.
அவர் ஜாஸ்லோக் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் நலமுடன் உள்ளார். ‘என் குழந்தை ஆசீர்வதிக்கபப்ட்டது என்றும் இந்த நேரத்தில் எனக்கு என்னவென்று விளக்க வார்த்தைகளே இல்லை என்று அவர் கூறினார்.
அவரது பெற்றோர்கள் போலல்லாமல், ஹர்ஷா மற்றும் திவ்யபால் ஷாவால் இயற்கையாகவே கருத்தரிக்க முடிந்தது.
மேலும் எந்த செயற்கை உதவியும் தேவைப்படவில்லை. மகிழ்ச்சியில் திளைக்கின்றன அவர்கள் குழந்தைக்கு பெயர் வைக்க நேரம் இல்லை என்று கூறினர்.

baby

Post a Comment

0 Comments