பாலாவி, அல்காசிமி, நூறு வீட்டுத்திட்ட மஸ்ஜிதுல்சலாம் புதிய நிர்வாக சபையினரும், மக்கள் சேவை மன்றத்தின் அங்கத்தவர்களும் ஊர்ஜமாஅத்தார்களும் இளைஜர்களும் ஒன்றிணைந்து பல புதியவேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக இதுவரை கவனிப்பாரற்று காடாய்க்கிடந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான பொதுநிலத்தை சிரமதானம்மூலம் துப்பரவு செய்து மக்கள் நலனுக்காய் பயன்படுத்துவதற்காக முயற்சியில் ஊர்மக்கள் இறங்கியுள்ளனர்.
இதன்படி சிரமதானம் கட்டம் கட்டமாக பள்ளி நிர்வாகசபையின் தலைவர் என்.எம். கலீல் மற்றும் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எச். எம் நவ்ஷாத் (முன்னாள்அதிபர்) ஆகியோரின் ஒத்துழைப்போடு நிர்வாகசபை உறுப்பினரும் மக்கள் சேவை மன்றத்தின் உதவி அமைப்பாளருமான சகோ. நியாஸ் (ரமீஸ்) அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதில் ஊர்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து பங்காற்றினர் இங்கு ஊர்நன்மைக்காக பாடுபட்டஅனைத்து சகோதரர்களுக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கியவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துகொள்கின்றோம் --
எஸ். எம். மணாப்தீன். செயலாளர்,மக்கள் சேவை மன்றம். புத்தளம்
0 Comments