Subscribe Us

header ads

மீள்குடியேறிய மக்களிற்கு மேலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பேன்- யாழ் சமூக சேவகர் எம்.நஸீர்


பாறுக் ஷிஹான்


கடந்த கால அசாதாரண சூழலால் இடம்பெயர்ந்து தற்போது யாழ்ப்பாணத்திற்கு பல முஸ்லீம் குடும்பங்கள் மீளவும் குடியேறி வாழ்கின்றனர்.இந்நிலையில் அம்மக்களிற்கான அடிப்படை தேவைகள் பல தரப்பினால் செய்து கொடுக்கப்பட்ட போதிலும் இன்னும் அவர்களிற்கான தேவை கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

யாழ் பொம்மைவெளி பகுதியில் முதலாம் குறுக்குத்தெரு பகுதியில்  உள்ள சுமார் 25 க்கு அதிகமான குடும்பங்கள் கடந்த 7 வருடங்களாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.இம்மக்களிற்கான உதவிகள் பல அரச நிறுவனங்களால் வழங்கப்பட்ட போதிலும் நிறைவானதாக இருக்கவில்லை.

ஒரு வீட்டினை வேய 10 தகரங்கள் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டால் ஒரு பக்கத்தை தான் வேய வேண்டி இருக்கும்.மற்றைய பகுதி இடைவெளி உள்ளதாக காணப்படும்.

அவ்வாறாக உள்ள வீடுகள் தனி ஒரு நபரினால் அடையாளம் காணப்பட்டு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொம்மைவெளி பகுதியில் உள்ள ஒரு குடும்பம் நிறைவாக வீட்டினை கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் சமூக சேவகரும் வர்த்தகருமான எம்.சி நஸீரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய இன்று அக்குடும்பத்திற்கு தேவையான கூரைத்தகடு ஒரு தொகுதி இன்று(23) காலை   வழங்கப்பட்டது.

இதன் போதுஅப்பகுதி அபூபக்கர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.றிஸ்வான் மற்றும் முபாறக் ஆகியோர் இணைந்து கூரைத்தகடுகளை வழங்கி வைத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சமூக சேவகர் நஸீர் எனக்கு தனிப்பட்ட அழைப்பாக பலர் உதவிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.இதனை படிப்படியாக செய்து வருகின்றேன்.அடுத்து அப்பகுதி மக்களின் சீமேந்து தேவை உள்ளதாக கூறுகின்றனர்.அதனை செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

இம்மக்களின் நலனிற்காக அரசாங்க அதிபர்,யாழ் பிரதேச செயலாளர் போன்றோரை சந்திக்கவுள்ளேன்.இந்த சேவையை இப்பகுதியில் உள்ள எந்த தரப்பும் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்காது சேவை செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.



Post a Comment

0 Comments