இலங்கையிலுள்ள வளர்ந்தோர்களில் 40 சதவீதமான ஆண்களும் 2 சதவீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர் எனவும், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் 20 சதவீதமான கட்டில்களில் மதுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே சாமிக ஜயசிங்க மேற்கூறிய தகவல்களை வெளியிட்டார்.
மதுவாலும் புகையாலும் ஏற்படும் தீங்குகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நலன்புரி அமைப்புகள் தொடர்ந்தும் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments