பேஸ்புக்கிள் எப்போதாவது மட்டுமே மிக அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டக் கூடிய ஆரோக்யமான கட்டுரைகளை வாசிக்கக் கிடைக்கும்.
அடுத்துவரும் ஏப்ரல் மாதத்தில் மூன்று விடயங்கள் குறித்து பேஸ்புக்கிள் அர்த்தமற்ற விவாதங்களால் அனல் பறக்கும் என்று பட்சி சொல்லுது.
ஏப்ரல் முதலாம் திகதி ''விளையாட்டுக்கும் நான் பொய் சொல்லமாட்டேன் ஏன் என்றால் நான் ஒரு முஸ்லிம்'' என்று யாராவது கிளப்பிவிடுவார்கள்.
பின்னர் இப்படியான தினங்கள் யூதர்களின் சதி என்று ஒரு கூட்டம் கிளம்பும். மற்றைய நாட்களில் பொய்சொன்னாலும் பரவாயில்லை ஏப்ரல் முதலாம் திகதி பொய்சொல்வதுதான் பெறும்பாவம் என்பது மாதிரி கட்டுரை கட்டுரையா எழுதிக் கொண்டு இருப்பார்கள்.
அடுத்த குரூப் ''தமிழ் சிங்களப் புத்தாண்டில் வாழ்துச் சொல்லலாமா'' என்று பழைய சர்ச்சையை கிண்டிவிடும். இப்படி வாழ்த்துச் சொல்வதை ஆதரித்தும், எதிர்த்தும் சிலரது பேஸ்புக் வண்டி ஓடும்.ஆனால் இந்த விடயத்தில் யாருக்கும் ஒரு முடிவுக்கு வர முடியாத அளவுக்கு விவாதங்கள் அனல் பறக்கும்.
அடுத்து ஏப்ரல் கடைசியில் ஏ ஆர் ரஹ்மான் இலங்கை வருகிறார் அங்கே நாநாமாறும் தாத்தாமாறும் நிரம்பி வழியக்கூடும்.
அங்கே யாராவது ஒரு தாத்தா அபாயாவோடு இருக்கும் புகைப்படம் யாராவது ஒரு சமூகக்காவளரின் கைக்கு கிடைக்கக்கூடும்.
அதை கொண்டுவந்து ''எமது பெண்கள் சமூகம் எங்கே போகிறது'' இவற்றுக்கு யார் பொருப்பு''என்று சமூகப் பாதுகாப்பு ''சோட போத்தல்'' கட்டுரை எழுதத் தொடங்கும் ஒரு கூட்டம்.
இப்படி ஒவ்வொரு காலத்துக்கும் ஏதாவது அர்த்தமற்ற தலைப்புக்களை உருவாக்கி சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றோம்.
அதன் மூலம் யாருக்கும் ஒரு மார்க்கத் தெளிவோ பயனோ பெறமுடிந்தால் சமூகத்துக்கு ஆரோக்யமாக இருக்கும்.
ஆனால் இவற்றின் மூலம் சமூகத்தைக் கூறுபோட்டு சன்டைபிடித்து தனிப்பட்ட குரோதங்களை வளர்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதுதான் வேதனை.
-Safwan Basheer-
0 Comments