காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை எல்லோரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு தண்ணீர் நிறைந்த நீராகாரங்களை குடித்து வந்தால், உடற்சக்தி அதிகரிக்கும். சிறுநீரக செயல்பாடு, செரிமானம், இரத்த ஓட்டம் போன்றவை மேம்படும்.
தண்ணீர்
காலை எழுந்தவுடன் தண்ணீருடன் அந்த தினத்தை தொடங்குவது சிறப்பு. இது வளர்ச்சிதை மாற்றத்தை 25% வரை வேகப்படுத்த உதவுகிறது. குறைந்தபட்சம் 500 மில்லி நீராவது பருகுங்கள்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீர் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து காலை எழுந்ததும் பருகுங்கள். இது உடல் உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமிளிக்கும்.
பூண்டு நீர்
பூண்டு நீர் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடியுங்கள். வெறும் வயிற்றில் இதை பருகுவது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, கல்லீரல் செயலாற்றல் சிறக்கவும் உதவுகிறது
மஞ்சள் நீர்
மஞ்சள் நீர் தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து பருகுவதால் ஆண்டி-ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரிக்கிறது. மேலும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையவும் இது பயனளிக்கிறது.
க்ரீன் டீ
க்ரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடலில் புத்துணர்ச்சி அதிகமாக காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகுங்கள்.
இஞ்சி டீ
இஞ்சி டீ காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
உருளைக்கிழங்கு ஜூஸ் சிறுநீரகத்தின் செயல்பாடு சிறக்க, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, செரிமானத்தை ஊக்குவிக்க தினமும் காலை உணவருந்தும் முன்பு உருளைக்கிழங்கு ஜூஸ் பருகுங்கள்.
0 Comments