நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளில் உள்ள வங்கி கணக்குகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்கள் அனைத்தும் பிரதமரால் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவிக்கப்படும்.
ஆனால் இதற்கான தகவல்களை திரட்டுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இதேநேரம், நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலங்கையில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகளை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேநேரம் கூட்டுறவு சங்கங்களின் சுயாதீன செயற்பாடுகள் கேள்விக்குறியாகி இருப்பதாக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தினார்.
இதற்கிடையில், யுத்த பாதிப்புக்கு உள்ளாகி மீண்டுவருகின்ற பகுதிகளில் அதிக அளவில் மதுபான சாலைகள் திறக்கப்படுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.
0 Comments