Subscribe Us

header ads

கொரியாவில் பணி புரியும் இலங்கையர்களால் 7 பில்லியன் டொலர்கள் வருமானம்!

கொரியா நாட்டிற்கு வேலைவாய்ப்பைத் தேடிச் சென்றுள்ளவர்கள், நாட்டின் பொருளாதார துறைக்கு பெறும் பங்கு வகிப்பதாக கொரியா நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் மனிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களால் ஆண்டுதோறும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் அரசாங்கத்திற்கு கிடைப்பதாக தெரிவித்துள்ள அவர் தற்போது கொரியாவில் 30,000 இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும், அதற்காக கொரியா நாடுபூராகவும் தூதரக அலுவலகர்கள் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இலங்கையர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் மனிசா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையர்களின் நலன் கருதி தூதரகம் ஊடாக இராஜதந்திர ரீதியிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments