Subscribe Us

header ads

சமூக + குடும்ப உறவுகளை புதுப்பிக்க சில யோசனைகள் !

ஆக்கம் : இல்ஹாம் மரைக்கார் (உளவியல் ஆலோசகர்)



ஒரு காலத்திலே முஸ்லிம் மக்கள் அனைவருடனும் மிக அந்நியோன்யமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

பல மத கலாச்சார நிகழ்வுகள் , மேடை நிகழ்சிகள் , கொடி  ஏற்றங்கள் , தளபத்திஹா , மௌலூத்து ஓதுதல் , ஹம்சு சொல்லி போகுதல், மீளத்துன் நபி நிகழ்சிகள், நாருசா கொடுத்தல், கத்னா நிகழ்வுகள் ,  சில விசேட தினங்களிலே - குழுக்களாக உணவு சமைத்து அனைவருக்கும் கொடுத்தல்,
பாலும் பழமும் கொடுத்தல், .... ராதிப் நிகழ்சிகள் , நோன்பு காலங்களில் ஹிஸ்பு ஓதுதல் ,விசேட தினங்களிலே கந்தூரி வைத்தல், என ஏராளமான சமூக நல்லினக்க விடயங்களை  நம் முன்னோர்கள் செய்துவந்துள்ளனர்.

இதன் காரணமாக குடும்பங்கள் , உறவினர்கள், ஏனைய சமூகங்களோடு மிகவும் நெருக்கமான உறவினையும்  வைத்து வந்துள்ளனர். இந்த நிகழ்வுகளால் பின்வரும் பயன்களும்  கிடைத்துள்ளது.

1. குடும்பங்களோடும் , ஏனைய இனத்தவர்களோடும்  நெருக்கமான உறவு.
2. ஆளுமை விருத்தி.
3. தலைமைத்துவ பண்புகள்.
4.விட்டுக்கொடுக்கும் பழக்கம்.
5. நல்ல ஒழுக்க விழுமியங்கள் .
6. அயல் வீட்டாருடன் ஒற்றுமை .
7. சிறுவர்கள் பெரியவர்களை பார்த்து பழகுதல்.
8. இஸ்லாமிய கலாச்சாரம் தொடருகின்றமை.
9. மன அழுத்தம் , அதி வெட்க சுபாவம், போன்றவை கலயப்படுகின்றமை.
10. கொடுத்து உதவும் பழக்கம்,

போன்ற பல நல்ல விடயங்கள் இந்த நிகழ்வுகளினால் ஏற்பட்டது .

ஆனால் இன்று உள்ள நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய சமூகம் , இன்று  கேவலப்படுவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். 

முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் , இறக்கமற்றவர்கள், கல் மனம் படைத்தவர்கள்,அசுத்தமானவர்கள் , நாட்டு பற்று அற்றவர்கள் , ஏமாற்றுக்காரர்கள்  என எத்தனையோ விதத்தில் மீடியாக்கள் விமர்சிப்பதை நாம் காணுகின்றோம்.

இந்த நிலை மாற வேண்டுமாயின் தனி நபர்கள் மாறவேண்டும், குடும்பங்கள் மாறவேண்டும் , இந்த மாற்றம் தொடர்ந்தால் ... முழு உலக முஸ்லிம் சமூகத்தில் மாற்றத்தை காணமுடியும். ஆகவே உங்களது முதல் அடி - தனி நபர் மாற்றம்.

எங்கள் தனி நபர் மற்றும் சமூக மாற்றத்திற்கான சில ஆலோசனைகளை உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.

1. எமது மூதாதையர்கள் காலகாலமாக செய்துவந்த மேலேயுள்ள விடயங்களை சற்று வித்தியாசமாக செய்ய முயற்சிப்போம். 

அதனால் அவ்வாறில்லாமல் நாம், குடும்ப - சமூக நல்லினக்கத்திற்காக வேண்டி பின்வரும் விடயங்களை இவ்வாறு செய்தால் என்ன..!

1.எமது பெருநாள் தினங்களிலே அல்லது எமது விஷேட தினங்களிலோ எமது வீட்டு முன்னால் அல்லது  கடைக்கு முன்னால் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும், பாதையில் செல்கின்றவர்களுக்கும், முக்கியமாக ஏழை எளியவர்களுக்கும் இலவசமாக குளிர்பானங்கள் , பால்சோறு , சிற்றுண்டிகள் கொடுத்து எமது நல்ல பண்பினை வெளிக்காட்டலாம்  அல்லவா !

2. பிரதான கடை தெரு ஓரங்களிலும் , முக்கிய இடங்களிலும் , இதனை குழுக்களாக செய்யலாமல்லவா !

இதன் போது team work , understanding , friendship development , leadership skills போன்றவை வளர்கிறது.

3. உங்களது ஊரிலுள்ள Police Station , Hospital போன்ற அந்நியர்கள் இருக்கும் இடங்களுக்கும் கொடுக்கலாமே !

(social community impact development and understanding of humanity)

4. மீலாதுன் நபி நிகழ்சிகளை போட்டி நிகழ்ச்சியாக மாற்றி - சிறுவர்களின் ஆளுமை , பேச்சாற்றல் போன்ற புதிய நவீன தலைப்புகளில் அவற்றை மாற்றி எமது சமூகத்தின் கண்களான சிறுவர்களின் ஆளுமைகளை வெளிக்கொண்டு வரல் வேண்டும். இதனை விட்டு விட்டு இது ஹராம் , இது ஷிர்க் என்ற வாதங்களை முன்வைத்து குழந்தைகளின் வாழ்கையில் விளையாட வேண்டாம். விரும்பியவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் மதம் சம்மந்தமான தலைப்புக்கள் மற்றுமல்லாமல் பல நவீன தலைப்புக்களையும் உள்வாங்கி இந்த மீளந்துன் நபி நிகழ்சிகளை புதுமை படுத்த முன்வாருங்கள்.

(இவற்றை குடும்ப சமூக ஒற்றுமைக்காக செய்கிறோமே தவிர இதில் எந்தவிதமான மத சடங்குகள் இடம்பெறக்கூடதவாறு கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேலும் ஆண் , பெண் கலப்பும் இருத்தல் கூடாது)


5. ரபியுல் அவ்வள்  மாதம் ஒரு புனிதம் பொருந்திய மாதம் என எமக்குத் தெரியும் . முன்னைய காலங்களிலே நாம் பல விடயங்களை செய்துவந்தோம். இதனால் பல ஒற்றுமை நல்லினக்கங்கள் ஏற்பட்டன.

ஆனால் இன்று அவ்வாறில்லை. நாம் facebook இலே மிக தொலைவிலுள்ள பலருடன் நண்பராக இருக்கின்றோம் .. ஆனால் அடுத்தவீட்டு நண்பருடன் கதைக்க நேரமில்லாமல் இருக்கிறது.

ஆகவே இந்த மாதத்திலிருந்து கூட்டாக உணவு சமைத்து ஒரு நல்லினக்கமான நிகழ்வாக இதனை செய்வோம்.

இந்தவிடயங்கள் சம்மந்தமாக பல நாடுகளில் பல ஆய்வுகள் நடத்திய பின்னரே இதனை நான் எழுதுகின்றேன். 

அந்நிய சமூகங்கள் இந்த விடயங்களை மிக நன்றாக பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். நாம் மட்டுமே இதனை செய்வதிலிருந்து விடுபட்டு வருகிறோம்.

இதனோடு தொடர்புடைய பல புதிய idea க்கள் இருந்தாலும், எனது facebook இல் update செய்யவும்.

இன்ஷா அல்லாஹ் .. ஆரம்பியுங்கள் .. அல்லாஹுக்காக என்ற நிய்யத்துடன் .

உங்கள் 
இல்ஹாம் மரைக்கார்.
உளவியல் ஆலோசகர்.

Post a Comment

0 Comments