Subscribe Us

மட்­டக்­க­ளப்பில் பெண்களை மயக்கும் கல்.

மட்­டக்­க­ளப்பு நகரில் பட்டப் பகலில் படு­வான்­க­ரையைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து கொடி, மாலை, காப்பு என்­பன அப­க­ரித்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
புதன்­கி­ழமை காலை நடை­பெற்ற இச்­சம்­பவம் தொடர்­பாக சுமார் மூன்­றரை இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான மேற்­படி பொருட்­களை இழந்த திரு­மதி மேகலா பத்­ம­நாதன் என்­பவர் தகவல் தரு­கையில் கூறி­ய­தா­வது,
புதன்­கி­ழமை காலை மண்­ட­பத்­த­டி­யி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு நக­ருக்கு ஒரு­தே­வையின் நிமித்தம் சென்றேன். அர­சடி மக்கள் வங்­கிக்கு சமீ­ப­மாக சென்ற போது எதிர்­கொண்ட ஒருபெண் சிங்­க­ளத்தில் கதைத்தார். நான் ஒன்றும் விளங்­க­வில்லை என்று கூறி நடந்தேன்.
அப்­போது பின்னால் இருந்து வந்த ஓர் ஆண் என்னை மறித்து அப்பெண் என்ன கேட்டாள் என்று தமிழில் கேட்டார். அப்­போது அவர் தனது கைக்குள் இருந்து ஒரு கல்லை என்­னிடம் காட்­டினார். பின்னர் இரு­வரும் என்னை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் முன்­பாக திரு­மலை வீதி­யூ­டாக லொயிட்ஸ் அவ­னி­யுக்கு சென்­றனர்.
அங்கு வைத்து என்னை மிரட்டி எனது நகை­களை அப­க­ரித்துச் சென்­றனர். அப்­போ­து­ எ­னக்கு இலே­சான மயக்கம் இருந்­தது. இதனால் அந்த இடத்தில் அமர்ந்து விட்டேன்.
பின்னர் மயக்கம் தெளிந்து அழுது கொண்டு முனை­வீதி குறுக்­காக உள்ள அறி­மு­க­மான நகைக் கடை ஒன்­றுக்கு சென்று எனது வீட்­டா­ருக்கு தகவல் அனுப்­பினேன். பின்பு மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலையம் சென்று முறைப்­பாடு செய்தேன்.
அவர்கள் என்­னிடம் காட்­டிய கல் மயக்­கத்தை அல்­லது வசி­யத்தை ஏற்­ப­டுத்தும் கல்­லாக இருக்க வேண்டும். எனவே, அவதானமாக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன். எனக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்றார்.

Post a Comment

0 Comments