Subscribe Us

header ads

அச்­சு­றுத்­தல்­க­ளை­ய­டுத்து அமெ­ரிக்க தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய முஸ்லிம் அமைப்பு

அமெ­ரிக்­கா­வி­லுள்ள முன்­னணி முஸ்லிம் அமைப்­பொன்று அச்­சு­றுத்தும் செய்தி மற்றும் வெள்ளை நிறத் தூள் என்­ப­வற்றைப் பெற்­ற­தை­ய­டுத்து வாஷிங்டன் நக­ரி­ லுள்ள தனது தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளது.

ஆரம்­பத்தில் மேற்­படி வெள்ளை நிறத் தூள் அபா­ய­க­ர­மான ஒரு பொரு­ளாகக் கரு­தப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தத் தூளுடன் தொடு­கை­யுற்ற அந்த அமெ­ரிக்க இஸ்­லா­மிய உற­வுகள் சபையைச் சேர்ந்த இரு உத்­தி­யோ­கத்­தர்கள் அந்த அலு­வ­ல­கத்தில் தனி­மைப்­ப­டுத்தி தங்­க­வைக்­கப்­பட்­டனர்.
தொட­ர்ந்து அந்தத் தூளை இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­திய போது அது அபா­ய­க­ர­மான ஒன்­றல்ல என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அந்த சபையின் இரு உத்­தி­யோ­கத்­தர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட் ­டனர். கடித உறை­யொன்றில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான வெள்ளை நிறத்தூளுடன் அனுப்­பப்­பட்­டி­ருந்த அந்த செய்­தியில் 'முஸ்­லிம்­க­ளுக்கு வலி­யுடன் கூடிய மரணம்' என்ற வாசகம் எழு­தப்­பட்­டி­ருந்­தது.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா அண்­மையில் ஒரு உரையின் போது, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வது தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.
அமெ­ரிக்­காவில் முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­வது வழ­மைக்கு மாறான நிகழ்­வல்ல என்ற போதும், பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு மாதத்­துக்கு முன்னர் தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அச்­சு­றுத்­தல்கள் அதி­க­ரித்­துள்­ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments