Subscribe Us

header ads

ஒரு மதம் இன்னுமொரு மதத்தைக் கட்டுப்படுத்த முடியாது: ஜனாதிபதி (படங்கள்)

சமூகத்தில் எந்தவொரு மதமும் இன்னுமொரு மதத்தை கட்டுப்படுத்தவோ கோட்பாடுகளை மூழ்கடிக்கவோ அல்லது பலவந்தமாக புகுத்தவோ இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே காணப்படுவதாகவும் மதங்களின் அடையாளங்கள் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பில் அமைக்கப்பட்ட 16ஆவது பெனடிக் கல்வி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

 
இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் இனங்கள், மதங்கள், மொழிகள் போன்று அனைவருக்கும் மதத்துக்குரிய அடையாளங்கள் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்களின் மத மற்றும் கலாசார அடையாளங்களும் மொழிக்குரிய அடையாளங்களும் அவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான காராணியாக அமைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று முழு உலகையும் ஒரே கிராமமாக மாற்றியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மனித சமூகத்தின் இருப்பை உரிய முறையில் பேணுவதற்கும் தனிமனித வாழ்க்கைக்கும் அறிவும் அனுபவமும் உதவி புரியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அறிவைப் பெற்றுள்ள ஒரு சாரார் சமூகத்தை வழிநடத்துவதற்கு அதை பயன்படுத்துவதோடு இன்னுமொரு சாரார் உலக அழிவின் தேவைக்காக அந்த அறிவைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments