ஓபநாயக்க ஹல்வித்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும்-உந்துருளியொன்றும் மோதியதில் உந்துருளியை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையை மருத்துவமனையில் பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
26 வயதான ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு எதிர்வரும் மாதம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேரூந்தின் சாரதி பொறுப்பற்ற முறையில் பேரூந்தை ஓட்டியமையே விபத்து ஏற்பட காரணமாக இருந்துள்ளது.
பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டு ஓபநாயக்க காவற்துறையினரால் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விபத்து இடம் பெற்ற இடத்திற்கு அருகில் இருந்த அங்காடியொன்றில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த விபத்து தொடர்பான காணொளி.....
0 Comments