கடந்த சில தினங்களுக்கு முன்பு Saudi Arabia நாட்டில் Riyadh நகரில் அமைந்துள்ள Seder Group Trading Company ல் ஒரு வருட காலமாக பணிபுரிந்து வந்த சலீம் முகம்மத் பவ்மி என்ற நபரை காணவில்லை என்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அவரைப் பற்றிய ஒரு திடுக்கிடும் செய்தி ஒன்று குடும்பத்தாரர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் அவர் மரணித்து விட்டதாகவும் அது இயற்கை மரணம் இல்லை இது திட்டமிடப்பட்ட கொலை என்று நேரில் பார்த்த நம்பந்ததகுந்த சிலரால் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இதன் உண்மை நிலையை அறிய அவர் பணி புரிந்த Company க்கு குடும்பத்தாரர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் தெரிவித்ததாவது,
விடுதியின் பின்புறம் அமைந்திருக்கும் பாவனையற்ற கழிவறை ஒன்றிலிருந்து உடல் முழுதும் அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்தததாகவும், குறிப்பிட்ட அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாக சக பணியாளர்களால் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததையொட்டி அங்கு விரைந்த பொலிசாரினால் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் மீட்கப்பட்டு Riyadh நகரில் அமைந்துள்ள Al Shumaisi அரச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் உடல் மீட்கப்படும் போது சாரம் (sarong) ஒன்ரினால் கழுத்தின் பகுதி கட்டப்பட்டு அதன் மறுமுனை ஜன்னலில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த அறையில் தூக்கிலிட்டு மரணிக்க வாய்ப்பில்லை எனவும் உடல் முழுவதும் சுவரில் சாய்த்த படி கால் தரையில் இருக்கும் பட்சத்தில் தூக்கிலிட்டு மரணிக்க சாதியமில்லை,
அது மட்டுமன்றி அதற்கான அறிகுறிகள் எதுவுமே அந்த அறையில் இருக்கவில்லையெனவும் இது கொலை செய்து அதை தற்கொலை போன்று வர்ணிக்க முயற்சித்துள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் குடும்பத்தார்களுக்கு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனடிப்படையில் குடும்பத்தாரர்கள் Forign Ministry லும் bureau department of labor லும் riyath நகரில் அமைந்துள்ள இலங்கை Embassy லும் முறைப்பாடு செய்துள்ளனர்.
ரியாத் இல் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு குடும்பந்தினரால் தொடர்பு கொண்டு கேட்ட போது இது பற்றி எந்த தகவலும் குறிப்பிட்ட Company ல் இருந்து இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் இது பற்றி ஏதேனும் தகவல் தெரியவந்தால் குடும்பத்தாரர்களுக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே இதற்கான நியாயம் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் வெளிநாடுகளில் வேலை புரிபவர்களுக்கு இப்படியான நிலைமை வர கூடாது என்றும் பனி புரியும் Company ல் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அதை உங்கள் அருகே வசிக்கும் யாரவது ஒருவரிடமோ குடும்பத்தாரர்களுக்கோ நண்பர்களுக்கோ கண்டிப்பாக தெரியப்டுத்துமாறும் தயவு செய்து இந்த செய்தியை அனைவருக்கும் Share செய்வதன் மூலம் இச்சம்பவம் பற்றி அறிந்தவர்களால் மேலதிக தகவல்கள் தெரிய வருமாயின் இவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க உதவிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாரர்களுக்கும் அல்லாஹ் இன்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பந்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்தவர்கள் தயவு செய்து இத்தொலைபேசி இலக்கங்களுக்கு 0094778376122 அல்லது 0094770261898 தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்டு கொள்கின்றனர்.
0 Comments