Subscribe Us

களுபோவில வைத்தியசாலை பெண் வைத்தியர் தற்கொலை: காரணம் இதுவா?

களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றும் பெண் வைத்தியரொருவர் கடந்த மாதம் 30 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது வீட்டில் வைத்து தூக்கில் தொங்கி குறித்த பெண் வைத்தியர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

தலங்கம , கலல்கொட பிரதேசத்தில் வசித்த 36 வயது பெண் வைத்தியரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவருக்கு 7 மற்றும் 4 வயதான இரண்டு மகன்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் கணவரும் வைத்தியர் எனவும் , அவரும் களுபோவில வைத்தியசாலையில் சேவையாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலைக்கு முன்னர் அவர் கடிதமொன்றை எழுதிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில் , குழந்தை பெற்றதன் பின்னர் தொடர்ந்த மன உளைச்சலே தற்கொலை முடிவுக்கான காரணமென தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments