Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று.... டிசம்பர் - 15

1256 : மொங்­கோ­லியப் பேர­ரசன் குலாகு கான் அலா­முட்­டினால் (தற்­போ­தைய ஈரானில்) எனும் இடம் கைப்­பற்றி அழிக்­கப்­பட்­டது.

1891 :  கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்  அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

1905 : அலெக்­ஸாண்டர் புஷ்­கினின் கலா­சாரப் பழ­மை­களைப் பேணும் பொருட்டு ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்­கப்­பட்­டது.

1914 : முதலாம் உலகப் போர்: சேர்­பிய இரா­ணுவம் தலை­நகர் பெல்­கி­ரேடை மீண்டும் கைப்­பற்­றி­யது.

1914 : ஜப்­பானில் மிட்­சு­பிஷி நிலக்­கரிச் சுரங்­கத்தில் ஏற்­பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : யுக்­ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாஸி­க­ளினால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

1960 : நேபாள மன்னர் மஹேந்­திரா அந்­நாட்டு அர­சாங்­கத்தைக் கலைத்து நாட்டின் முழு அதி­கா­ரத்­தையும் தன­தாக்கிக் கொண்டார்.

1967 : அமெ­ரிக்­காவின்  ஒஹையோ மாநி­லத்தில் ஒகையோ ஆற்­றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்­ததில் 46 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1970 : சோவியத் ஒன்­றி­யத்தின் வெனேரா 7 விண்­கலம் வெள்ளி கோளின் மேற்­ப­ரப்பில் மெது­வாக இறங்­கிய முத­லா­வது கல­மா­கி­யதும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்­கிய முத­லா­வது விண்­க­ல­மாகும்.

1970 : தென் கொரியப் பய­ணிகள் கப்பல் கொரிய நீரி­ணையில் மூழ்­கி­யதில் 308 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1978 : மக்கள் சீனக் குடி­ய­ரசை அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும் தாய்­வா­னு­ட­னான உற­வு­களைத் துண்­டிப்­ப­தா­கவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் அறி­வித்தார்.

1981: லெப­னானின் பெய்ரூத் நகரில் ஈராக்­கிய தூத­ரகம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் லெபனா­னுக்­கான ஈராக் தூதுவர் உட்­பட 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1997 : தஜி­கிஸ்தான் விமா­ன­மொன்று ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் ஷார்ஜா விமான நிலை­யத்­திற்கு அருகில் வீழ்ந்து நொருங்­கி­யதில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1997 : தென் கிழக்கு ஆசி­யாவை அணு­வா­யு­த­மற்ற பகு­தி­யாக அறி­விக்கும் உடன்­ப­டிக்கை பாங்­கொக்கில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

2000 : செர்­னோபில் நகரில் மூன்­றா­வது அணு உலை மூடப்­பட்­டது.

2001 : பைஸாவின் சாய்ந்த கோபுரம் 11 ஆண்­டு­களின் பின்னர் மீண்டும் திறக்­கப்­பட்­டது.

2009 : போயிங் நிறு­வ­னத்தின் 787 விமானம் முதல் தட­வை­யாக அமெ­ரிக்­காவின் சியாட்டில் நக­ரி­லி­ருந்து பறந்­தது

2010 : புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் 90 பேரை ஏற்றிச் சென்ற பட­கொன்று அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறையில் மோதி உடைந்தால் 48 பேர் உயிரிழந்தனர்.

2014 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் துப்­பாக்­கி­தாரி ஒருவன் 18 பேரை பண­யக்­கை­தி­யாக பிடித்­து­வைத்­தி­ருந்தான். பொலி­ஸாரின் முற்­று­கை­யின்­போது துப்­பாக்­கி­தாரி உட்­பட  மூவர் கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments