1256 : மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட்டினால் (தற்போதைய ஈரானில்) எனும் இடம் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
1891 : கூடைப்பந்தாட்ட விளையாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் அறிமுகப்படுத்தினார்.
1905 : அலெக்ஸாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 : முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் தலைநகர் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 : ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1941 : யுக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாஸிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1960 : நேபாள மன்னர் மஹேந்திரா அந்நாட்டு அரசாங்கத்தைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1967 : அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
1970 : சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகியதும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970 : தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் கொல்லப்பட்டனர்.
1978 : மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1981: லெபனானின் பெய்ரூத் நகரில் ஈராக்கிய தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் லெபனானுக்கான ஈராக் தூதுவர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர்.
1997 : தஜிகிஸ்தான் விமானமொன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமான நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
1997 : தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2000 : செர்னோபில் நகரில் மூன்றாவது அணு உலை மூடப்பட்டது.
2001 : பைஸாவின் சாய்ந்த கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2009 : போயிங் நிறுவனத்தின் 787 விமானம் முதல் தடவையாக அமெரிக்காவின் சியாட்டில் நகரிலிருந்து பறந்தது
2010 : புகலிடக் கோரிக்கையாளர்கள் 90 பேரை ஏற்றிச் சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறையில் மோதி உடைந்தால் 48 பேர் உயிரிழந்தனர்.
2014 : அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹோட்டலொன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரை பணயக்கைதியாக பிடித்துவைத்திருந்தான். பொலிஸாரின் முற்றுகையின்போது துப்பாக்கிதாரி உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
0 Comments