1041 : பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் கிழக்கு ரோம இராச்சியத்தின் பேரரசனாக்கினாள்.
1541 : இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் தோமஸ் கல்பெப்பர்ம், பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1684 : ஐசக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் வாசிக்கப்பட்டன.
1868 : உலகின் முதலாவது சமிக்ஞை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டன.
1898 : ஸ்பெயின், அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிஸில் கைச்சாத்திடப்பட்டது.
1901 : முதல் தடவையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1902 : அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
1906 : அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
1936 : இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தார்.
1941 : இரண்டாம் உலகப் போரில் மலாயாவுக்குக் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டன.
1941 : இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியப் படைகள் பிலிப்பைன்ஸை அடைந்தன.
1948 : மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாளாக அறிவிக்கப்பட்டது.
1963: பிரிட்டனிடமிருந்து ஸான்ஸிபார் சுதந்திரம் பெற்றது.
1968: ஜப்பானின் டோக்கியோ நகரில் வங்கியொன்றின் வாகனமொன்றிலிருந்து 30 கோடி யென் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜப்பானில் இடம்பெற்ற மிகப் பெரிய கொள்ளைச் சம்பவம் இதுவாகும்.
1978: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இஸ்ரேலிய பிரதமர் மெனாசெம் பெகின் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.
1981 : தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
1984 : தென் ஆபிரிக்க கறுப்பின பேராயர் டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
1989 : மொங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
0 Comments