Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று..... டிசம்பர் - 10

1041 : பைசண்டைன் பேர­ரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் கிழக்கு ரோம இராச்­சி­யத்தின் பேர­ர­ச­னாக்­கினாள்.

1541 : இங்­கி­லாந்தின் மன்னன் எட்டாம் ஹென்­றியின் மனை­வியும் அர­சி­யு­மான கத்­த­ரீ­னுடன் தகாத உறவு வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தோமஸ் கல்­பெப்பர்ம், பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1684 : ஐசக் நியூட்டன் தனது புவி­யீர்ப்பு விதி­களின் கொள்­கை­களில் எழு­திய கெப்­லரின் விதி­களின் தீர்­வுகள் ரோயல் சபையில் வாசிக்­கப்­பட்­டன.

1868 : உலகின் முத­லா­வது சமிக்ஞை விளக்­குகள் லண்­டனில் நாடா­ளு­மன்­றுக்கு வெளியே நிறு­வப்­பட்­டன.

1898 : ஸ்பெயின், அமெ­ரிக்கா போர் நிறுத்த உடன்­பாடு பாரிஸில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

1901 : முதல் தட­வை­யாக நோபல்  பரிசு வழங்­கப்­பட்­டது.

1902 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழக்­கப்­பட்­டது.

1906 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி தியோடோர் ரூஸ்வெல்ட் சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெ­ரிக்கர் பெற்ற முத­லா­வது நோபல் பரி­சாகும்.

1936 : இங்­கி­லாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்­ப­தாக அறி­வித்தார்.

1941 : இரண்டாம் உலகப் போரில் மலா­யா­வுக்குக் அருகில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் இரண்டு கடற்­படைக் கப்­பல்கள் ஜப்­பா­னி­யர்­களால் மூழ்­க­டிக்­கப்­பட்­டன.

1941 : இரண்டாம் உலகப் போரில் ஜப்­பா­னியப் படைகள் பிலிப்­பைன்ஸை அடைந்­தன.

1948 : மனித உரி­மைகள் குறித்த அனைத்­து­லகப் பிர­க­ட­னத்தை ஐ.நா. பொதுச் சபை அறி­வித்­தது. இந்நாள் உலக மனித உரி­மைகள் நாளாக அறி­விக்­கப்­பட்­டது.

1963: பிரிட்­ட­னி­ட­மி­ருந்து ஸான்­ஸிபார் சுதந்­திரம் பெற்­றது. 

1968: ஜப்­பானின் டோக்­கியோ நகரில் வங்­கி­யொன்றின் வாக­ன­மொன்­றி­லி­ருந்து 30 கோடி யென் பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. ஜப்­பானில் இடம்­பெற்ற மிகப் பெ­ரிய கொள்ளைச் சம்­பவம் இது­வாகும்.


1978: எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத், இஸ்­ரே­லிய பிர­தமர் மெனாசெம் பெகின் ஆகி­யோ­ருக்கு நோபல் சமா­தானப் பரிசு வழங்­கப்­பட்­டது. 

1981 : தெற்­கா­சி­யாவை அணு­வா­யு­த­மற்ற பகு­தி­யாக அறி­விக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்­கையை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக் கொண்­டது.

1984 : தென் ஆபிரிக்க கறுப்பின பேராயர் டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

1989 : மொங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.

Post a Comment

0 Comments