Subscribe Us

header ads

கடந்த 2004 ஆம் ஆண்டு மக்கள் எண்ணத்தில் வித்திட்டிராத ஆழிப்பேரலை எனும் சுனாமியில் கல்முனைப் பிரதேசத்தில் மருதமுனைக் கிராமம் மிக மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருந்தது யாவரும் அறிந்ததே


கடந்த 2004 ஆம் ஆண்டு மக்கள் எண்ணத்தில் வித்திட்டிராத ஆழிப்பேரலை எனும் சுனாமி நாடு பூராகவும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி இருந்தது யாவரும் அறிந்த விடயமே.இதில் குறிப்பாக கல்முனைப் பிரதேசத்தில் மருதமுனைக் கிராமம் மிக மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருந்தது யாவரும் அறிந்ததே சுமார் 922 உயிர் பிரிவினையும் 2750 வீடுகளையும் இழந்து நிர்க்கதிக்கு உள்ளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களில் கடற்கரையில் இருந்து சுமார் 65 M உட்பட்ட பிரதேசத்திற்கு வாழ்ந்த மக்களுக்காக மருதமுனை மேற்குப்புறமாக இருந்த மேட்டுவட்டையில் சுமார் 186 வீடுகளை நிர்மாணம் செய்வதற்காக தேசிய கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியமைச்சு அரச அபிவிருத்தி நிர்மாணக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டதற்கு இணங்க நிர்மாணப் பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமாணப் பணிகள் 2007 ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்து மக்கள் பாவனைக்காக வழங்கப்படும் என பிரதேச செயலாளர் உட்பட அரசாங்க அதிபரும். நம்பிக்கை தெரிவித்தனர். இதனால் உடமைகளை இழந்த மக்களும் தங்களுக்கும் நிரந்தர உறைவிடம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் காணப்பட்டது.
ஆழிப் பேரலை ஏற்பட்டு 05 வருடங்களையும் தாண்டி மக்களுக்கு வீடுகள் கிடைக்கப் பெறாமையினாலும் கடந்த 2009 ஆண்டு மே மாதம் 11 திகதி பலவந்தமாக மக்கள் குடியேறினர். அந்தக் காலகட்டத்தில் கல்முனைப் பிரதேச செயலாளராகக் காணப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த M.M நௌபல் பொலிசாரின் உதவியோடு மக்களிடம் 03 மாத கால அவகாசமும் கோரி பலவந்தமாக குடியேறிய மக்களை வெளியேற்றியும் இருந்தார்.

இவ்வாறாக இருந்து சொல்லப்பட்ட காலப்பகுதயில் இருந்து இவ் வீட்டுத் திட்ட விவகாரமானது அரசியல் பூசப்பட்டு அரசியல் மேசைகளிலும் பேசு பொருளாக மிளிரத் தொடங்கியது.
இவ்வாறான கோரப்பட்ட கால அவகாசத்தை தாண்டியும் வீடுகள் கிடைத்தால் போல் இல்லாமையும் அரசியல் மேடைகளில் வீடுகள் கையளிக்கப்படவுள்ளது என்கிற நம்பிக்கை தரும் வார்த்தை மூலம் மனதை திடமாக்கிக் கொண்டு " இழவம் பழம் காத்த கிழி போல் " அம்மக்கள் உள்ளனர்.
இப்போதாவது வீடு கிடைத்து விட்டது என்று மனதில் ஏற்றுக் கொண்டு நிம்மதிடைய மீண்டும் வீடு இப்பொழுதும் இல்லை என்று இன்னும் 03 மாதம் தானே பொறுத்ததோடு பொறுப்போம் என்று செய்வறியாது உறவினர் வீடுகளிலும், வாடகைவீடுகளிலும் , தகட்டுக் கொட்டிலிலும், பலகைக் கூடாரத்திலும் குறுகிய காலம் தானே என்ற எண்ணத்துடன் சீவிக்கத் தொடங்கினர்.
இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத மக்கள் தங்களின் உரிமைகளை கையில் எடுக்கும் பொருட்டு மீண்டும் ஓர்முறை பலவந்தமாக குடியேறினார்கள்.

எவ்வாறாக இருந்தாலும் வீடுகள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வீடுகள் மக்கள் ஒரு புறம் இருந்தாலும் மறு புறம் வீட்டுத் திட்டத்தின் நிலையானது. புற்பற்றைகள், விலங்குகள், காடையர்களின் உறைவிடமாறி இன்று அவ்வீட்டுத் திட்டமானது காடையர்களின் செயற்பாட்டினாலும் தினம் தினம் வீடுகள் சேதமடைந்து கொண்டேஇருக்கின்றது.
இவைகள் தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்களின் காய்நகர்த்தலுக்கு இம் மருதமுனையின் வீட்டுத் திட்டத்தினை கண்டும் காணாமலும் தங்களது செயற்பாடுகளை மேற் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு இருந்தும் இந்தக் காலப்பகுதியில் 2012 ஆம் ஆண்டு 01 ஆகஸ்ட்டு மாதம் 24 திகதி கல்முனைப்பிரதேச செயலாளராக பணியாற்றிய M.M.நௌபல் அவர்களுக்கு எதிராகக் கொடும்பாவி எரிக்கப்பட்டு அவருக்கு எதிரிக கண்டண ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. அவர் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் இழுபறி நிலைக்கி உள்ளாக்கியிருந்தமை இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் இவர் ஊழல் புரிந்திருப்பார் என்றும் அக் காலகட்டாத்தில் தகவல்கள் கசியவும் தொடங்கின
அத்தோடு நின்றுவிடாமல் தமக்கான வீடுகளை வழங்கக் கோரி 2012.01.02 திங்கட் கிழமை கல்முனை பிரதேச செயலகத்தினையும் முற்றுகையிட்டனர்ர. 

இதற்கான எதிர்ரொலி மீண்டும் வீட்டுத் திட்டத்தில் இருந்து மக்களை வெளியேறுவதற்கான அறீவுறுத்தல் வழங்கப்பட்டது அவ்வாறு இருந்தும் அம் மக்கள் வெளியேறவில்லை.
இது ஒரு புறம் இருக்க நீதிமன்றத்தில் அத்துமீறி குடியேறிமைக்காக இம்மக்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது வீடுகள் உடைத்தல் குற்றச் சாட்டில். இருந்தும் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கும் படியும் கட்டளை இட்டிருந்தது. இவ்வாறு நீதவானின் உத்தரவுக்கமைய முதற்கட்டமாக 50 வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தது. இன்று வரை முறையாக 100 வீடுகளே கையளிக்கப்பட்டும் இருந்தது இதுவரை 78 வீடுகள் கையளிக்கப் படாதவண்ணம் உள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ இழவம் பழம் காத்த கிழிகள் போன்று காணப்படுகின்றனர். இனியும் காலதாமதிக்காது இந்த நல்லாட்சியிலாவது வழங்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் மக்களும் உள்ளனர்

ஆனால் இப்போழுதும் இவ்வீட்டுத்திட்டம் காடையர்களின் காவலித்தனத்திக்கும் உட்பட்டும் மிருகங்களின் ஆடு மாடுகள் கட்டப்படுகின்ற இடமாகவே காணப்படுகின்றது அது மட்டுமில்லாது இளைஞர் யுவதிகளுக்கு பாலியல் சேட்டை செய்வதற்குரிய இடமாகவும் மாறி வருகின்றமை மனதுக்கு கவலையளிக்கின்றது.

இந்த வீட்டுத் திட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் " நான் ஒரு மணித்தியாலத்திக்க முடிக்க பிரச்சினை" என்று சினிமாப் பங்கில் வீரவசனம் வீசிவிட்டுச் சென்றார். சில மாதம் முன்பு மு.கா மருதமுனை மத்திய குழுக் கூட்டத்திலும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. ஆனால் இது வரை இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்படா வண்ணமே உள்ளனர்.
SAMZUL A RASHEED

Post a Comment

0 Comments