Subscribe Us

கல்பிட்டி சிறுகடலில் நீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

-முஹம்மது முஸப்பிர் 

கல்பிட்டி சிறுகடலில் செவ்வாய்க்கிழமை (06) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த புத்தளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் இருவருடன் இணைந்து மீன்பிடிப்பதற்காக உபகரணங்களுடன் சென்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இவர், திடீரென நீரில் மூழ்கியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, இவரை மீட்டு கல்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோதிலும், இவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Post a Comment

0 Comments