கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் பவள விழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து அரசியல் தலைவர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகள் சிலர் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கின்றனர்.
தமிழ்நாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணி வரை இடம்பெறவுள்ள இவ்விழாவின் தொடக்கவுரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்தவிருக்கிறார்.
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி, டாக்டர் தாசிம் அஹமட் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.
அத்துடன் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கம்பன் கழகத் த்தலைவர் ஈஸ்வரன், கம்பவாரிதி ஜெயராஜ், மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான், புரவலர் அப்துல் கையூம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் கலைஞர் கருணாநிதி நிறைவுரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
(அஸ்லம் எஸ்.மௌலானா)
0 Comments