Subscribe Us

header ads

சம்மாந்துறை பிரதேசத்தின் மக்களின் அடிப்படை தேவைகளை கன்டறியும் பொருட்டு கிராம சேவை உத்தியோகத்தர்களை சந்தித்த -கி.மா.ச உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்

சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தி மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை கன்டறியும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிராம சேவை உத்தியோகத்தர்கள் தான் மக்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்பதினால் மக்களின் அடிப்படை தேவைகள், பிரச்சினைகள் மற்றும் கிராமத்தின் அடிப்படை தேவைகள் தொடர்பாக கேட்டறியும் பொருட்டே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.ஹம்ஸார், சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எம்.மஹ்ரூப், மாஹிர் பவுன்டேசன் தலைவர் வை.வீ.சலீம், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்;ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments