Subscribe Us

header ads

பெரிய தந்தையுடன் காதல் தொடர்பில் யுவதி: ஊர் மக்கள் பொலிஸிற்கு முறைப்பாடு

தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது.


குறித்த யுவதி கர்ப்பமாக இருப்பதாகவும் , அது தொடர்பான பரிசோதனைகளுக்காக அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளின் பொருட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் பெரியம்மா தற்போது உயிருடன் இல்லையெனவும் , அவரின் வீட்டிலேயே குறித்த யுவதி வளர்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவரது பெரிய தந்தை
தெரிவித்துள்ளதுடன் , அவ் யுவதியும் அதையே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் , பொலிஸாருக்கு அறியத்தந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , யுவதி பராமரிப்பு இல்லமொன்றின் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments