புனித ஹஜ் கடமைக்காக சென்ற வேளையில் மினாவில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த கணவனும் மனைவியும் காணாமல் போயிருந்த நிலையில் தொடர்ச்சியாக இலங்கை அதிகாரிகள் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வந்தனர்.
இந் நிலையில் அபூபக்கர் அப்துல் அஸீஸ் (வயது 57) என்பவரது ஜனாஸா அவரது உறவினர்களால் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரியாத்திலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். எனினும் இவரது மனைவியின் நிலை தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


0 Comments