Subscribe Us

header ads

திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர், அதிர்ச்சியில் மனைவி!

கேரள மாநிலம், ஆலப்புழையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு, துபாயில் உள்ள அவரது கணவர் "வாட்ஸ் அப்'பில் 3 முறை தலாக் என செய்தி அனுப்பியுள்ளார். திருமணமான 10 நாளில் நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆலப்புழை மாவட்டம் சேர்தலா பகுதியைச் சேர்ந்தவரும், பல் மருத்துவம் படித்து வருபவருமான இளம்பெண் ஒருவர், கேரள மகளிர் ஆணையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், ''திருமணமான 10 நாட்களுக்குள்ளாக எனது கணவர் துபாய்க்கு புறப்பட்டார். அங்கு சென்று சேர்ந்த தகவலைக்கூட என்னிடம் தெரிவிக்கவில்லை.

நான் பலமுறை அவரை தொடர்பு கொண்டபோதும், குறுஞ்செய்தி அனுப்பியபோதும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. இறுதியாக, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பதில்தான் வந்து சேர்ந்தது. ''எதற்காக என்னை அழைக்கிறாய்? நான் உன்னை விரும்பவில்லை. எனக்காக காத்திருக்காதே. நமக்கு ஆப்பிள் பிடிக்குமென்றால் அதையேதான் நாள்தோறும் சாப்பிடுகிறோமா? மற்ற பழங்களையும் விரும்பிச் சாப்பிடுகிறோம் அல்லவா. தலாக், தலாக், தலாக்" என்ற பதில்தான் எனது கணவரிடம் இருந்து வந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இளம்பெண்ணின் திருமணத்தின்போது பத்து லட்சம் ரூபாய் பணமும், 80 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தவித காரணமும் இன்றி திடீரென அவரது கணவர் தலாக் அனுப்பியுள்ளார். திருமணமான 10 நாளில் நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், அவரது வாழ்க்கைகும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

Post a Comment

0 Comments