Subscribe Us

header ads

விகாரமகாதேவி பூங்காவில் Wi-fi


கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில்Wi-fi வலயத்தை  எற்படுத்துவதற்கு கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாநகரசபையின் மேயர் எம்.எப்.எம்.முஸம்மில் தலைமையில், இந்த Wi-fi வலயம், வியாழக்கிழமை (03) திறந்துவைக்கப்படவுள்ளது.  

குறித்த Wi-fi வலயத்தை ஸ்ரீ லங்கா டெலிகொமின் உதவியுடன்  விரிவுபடுத்தி அதன் பின்னர் மக்கள் பாவனைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.  

ஏற்கெனவே கோட்டை புகையிரத நிலையம், கோட்டை பொது மற்றும் தனியார் பஸ் நிலையம், மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக்கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சிசாலை, கொழும்பு ரேஸ்கோர்ஸ், கொழும்பு பொலிஸ் தலைமையகம், காலி முகத்திடல்,  பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் கொழும்பு நூதனசாலை ஆகியவற்றில்Wi-fi வலயம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 26 Wi-fi வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments