Subscribe Us

header ads

தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அற்புத உலகத்தை தந்த பெற்றோர்... (PHOTOS)



இந்த நவீன உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளுடன் வெளியே செல்வது அவர்களுக்கு சவாலான காரியமாகவே உள்ளது. அடிக்கடி வெளியில் சுற்றுலா செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டு கிடப்பது குழந்தைகளுக்கு தனிமையான உணர்வை கொடுக்கலாம். இது அவர்களது இளமைக்கால மகிழ்ச்சியை கூட குறைக்கலாம்.

நீண்ட தூரம் பயணம் செய்து பல்வேறு விதமான மக்களின் வாழ்க்கை முறையை உணர்வது அற்புதமான மனிதனை செதுக்கும். 

கனடா நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் குழந்தைகளுக்கு அவர்களது வாழ்நாளில் அழிக்க முடியாத சந்தோஷமான தருணத்தை கொடுக்க நினைத்தனர்.

புருஸ் கிர்பை மற்றும் கிரிஷ்டின் பிட்கெனென் என்ற அந்த தம்பதி தங்களது இரு ஆண் குழந்தைகளையும் உலகம் முழுவதும் சுற்றுலாவாக அழைத்து செல்ல எண்ணினர். அது பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணமாக கூட இருக்கும்.

ஆனால், அவர்கள் விமானத்தை தவிர்த்து மற்ற அனைத்து போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தி 13 ஆயிரம் மைல்களை கடந்து உலகை சுற்றியது ஆச்சர்யமான ஒன்றாகதான் இருக்கும். ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற இந்த பயணம் கனடாவிலிருந்து இமாலயா வரை சென்றது. விமானமின்றி 7 நாடுகளை கடந்த பொன்னான அனுபவத்தை அந்த பெற்றோர்களும் அடைந்திருப்பர். சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால் போன்ற புராதான சின்னங்கள் அனைத்தையும் அந்த குடும்பத்தின் பயணம் விட்டு வைக்கவில்லை.

ரிக்ஷா சவாரி, படகில் மிதத்தல், ரெயில் பயணம், யானை சவாரி போன்றவை அந்த குழந்தைகளுக்கு கிடைந்த மகிழ்ச்சியை எவ்விதத்திலும் கொடுக்க முடியாது. அவர்களது பயணத்தில் தாஜ்மஹால் சென்ற அனுபவம், டெல்லியில் உள்ள ஒரு மார்கெட்டில் பாரம்பரிய ‘டாட்டு’ போட்டு கொண்ட அனுபவம் போன்றவை இந்தியாவின் மறக்க முடியாத இனிமையான பார்வையை கொடுத்திருக்கும்.

13 ஆயிரம் மைல்களை தரைவழி மூலம் கடந்தது அந்த குழந்தைகளுக்கு வெறும் சுற்றுலாவாக அது அமைந்திருக்காது. பல்வேறு நாட்டு மக்களின் உணர்வுகளையும், சந்தோஷங்களையும், அவர்களது மனதில் விதைக்க செய்திருக்கும்.

இதுபோன்று 13 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்யாமல், தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த இடத்திற்கு அழைத்து சென்று, விளையாடி மகிழ்ந்தாலே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அது சொர்க்கமாக தான் அமையும்.















Post a Comment

0 Comments